Tuesday, May 7, 2013

* முஸ்லிம்களை எதிர்த்து செயல்படும் இந்த காடையர் கூட்டத்தின் நோக்கம் என்ன? இவர்களை ஏவி விட்டது யார்? -

முஸ்லிம்களை எதிர்த்து செயல்படும் இந்த காடையர் கூட்டத்தின் நோக்கம் என்ன? இவர்களை ஏவி விட்டது யார்? - முனாஸ் 


இன்று நாட்டில் சில இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், விசப்பேச்சுக்களும், இஸ்லாத்தை நையாண்டி பன்ணும் வார்த்தை பிரயோகங்களும், புனித இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதனை எந்த இஸ்லாமியனாலும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.?

இவ்வாறு கூறினார் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் அவர் தொடர்ந்து தனதறிக்கையில் கூறியிருப்பதாவது.
முஸ்லிம்கள் இன்று அவர்களின் வேலையும் அவர்களுமாக அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் இன்று திடீரென நாட்டில் ஏற்பட்டிருக்கும் விசமப்பிரச்சாரமும் நடவடிக்கைகளும் அனைத்து முஸ்லிம்களையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது,

குளியாப்பிட்டி என்னும் இடத்தில் நடந்த அந்த கோரக்காட்சி எந்த முஸ்லிமையும் பொறுமையுடன் இருக்க முடியாத ஒரு காடைத்தனமும், மோடைத்தனமுமான ஒரு செயல் “அல்லாஹ்” படைத்தவனுக்கு முஸ்லிம்கள் கூறும், அழைக்கும் பெயர்தான் “அல்லாஹ்” இந்த பெயரை அறபியில் எழுதி ஒரு பொம்மை செய்து அதனை ஊர்வலமாகக்கொண்டு வந்து அதனை எரித்த விடையம் உண்மையாக மெய்சிலிர்க்கவும் ஆத்திரத்தையும் வரவைக்கின்ற சம்பவம் மட்டுமல்ல கொடூரமாகும்.

எனவே இவைகள் தொடர்ந்து நடக்குமானால் யாராலும் பொறுத்துக்கொண்டு பார்த்தும் பார்க்காதவாறு பயந்து நடுங்கியவர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பதற்க்கு முஸ்லிம்கள் ஒன்றும் கோளைகள் அல்ல அன்புக்கு அடிமையாக இருக்கும் அவர்கள் அராஜகத்துக்கு எதிரடி கொடுக்க என்றும்தயாராக உள்ளனர், எனவே இந்த நாட்டில் பொதுபல சேனா என்னுமமைப்புக்கு வந்திருக்கும் கொதிக்கு முஸ்லிம்கள் பலியாக முடியாது அவர்களின் கொதியையும், வெறியையும் எங்காவது யாரிடமாவது காட்டவேண்டுமே தவிர அதனைக்கொண்டு முஸ்லிம்களைக் கஷ்டப்படுத்துவதும் , அவர்களின் ஆத்திரத்தை தூண்டும் வேலைகளைச் செய்வதிலும், வியாபார நிலையங்களுக்குள் புகுந்து காடைத்தனம் புரிவதும், நாட்டில் எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன, கணக்கெடுக்க வேண்டும் என்பதும், பணம் அதிகம் உள்ள முஸ்லிம் யார் என்று தேடுவதும், இதெல்லாம் எதற்க்காக இதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்.?

அந்த அமைப்பினர் எங்கிருந்து வந்தார்கள் திடீரென முழைத்த விசச்செடியாக இயங்கிக்கொண்டிருக்கும் அவர்களின் செயலை முஸ்லிம்கள் மத்தியில் காட்டாது தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதனை கண்டிப்பாகவும், கடைசியாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்று தெரிவித்தார் பிரதேச சபை உறுப்பினர் 

No comments:

Post a Comment