Saturday, November 16, 2013

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது. பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே. தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு. வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை. வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது. இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது. ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா? குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா? றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின. இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன. “அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம். பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம். தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள், தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள் எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்? இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை. இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ. முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன? அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள். மற்றும்- அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும், பள்ளிவாசல்கள் கட்டுதல், உழ்ஹய்யா கொடுத்தல், கிணறு வெட்டுதல் போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது. அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும். அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும். அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்... 0 அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும். 0 முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும். 0 அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும். இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன. அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள். கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும் ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா? ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்... ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை.... தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை! இதனால் ஏற்படும் இழப்பு... இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உம்மத்திற்கும், இலாபம்.. அரபு மன்னர்களுக்கும் அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..

Thursday, August 15, 2013

* அன்று தொப்பிக்காக போராடிய சமுதாயம், இன்று பள்ளிகளையே விட்டுக் கொடுக்கின்றது.


அன்று தொப்பிக்காக போராடிய சமுதாயம், இன்று பள்ளிகளையே விட்டுக் கொடுக்கின்றது.



நாங்கள் வெளிநாட்டவர்கள் அல்ல, நாங்கள் அரபு நாட்டு இறக்குமதிகள் அல்ல, நாங்கள் இந்திய வம்சா வழியினர் அல்ல. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், இலங்கை நாட்டின் புத்திரர்கள், இலங்கை எங்கள் தாய் நாடு. இதில் இலங்கை முஸ்லிம்கள் யாருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

ஆம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.

முஸ்லிம்களின் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றது, வியாபார தாபனங்கள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம் பெண்களின் ஆடைகள் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.

மொத்தத்தில் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டு, எதிர்கால இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது.

இப்படியான கால கட்டத்தில் நமது சமுதாயத் தலைவர்களின் கையாளாகாத் தனம் மற்றும் அரசியல் தலைமைகளின் சுய இலாப மோகம் போன்றவை முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் மீண்டும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்குள் தம்புள்ளை பள்ளிப் பிரச்சினையில் ஆரம்பித்து கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளி வரைக்கும் இது வரை 24 பள்ளிவாயல்கள் காவிக் காடையர்களினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவற்றில் ஒன்றுக்குக் கூட எவ்விதமான நிரந்தரத் தீர்வுகளும் எட்டப்படவில்லை.

போராடிப் பெற்ற உரிமைகளை போகிற போக்கில் தாரைவார்க்கும் முஸ்லிம் தலைமைகள்.

பள்ளிகளை அமைப்பதும், அதில் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினால் முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும். இந்த உரிமைகளை பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய இலங்கை இஸ்லாமிய முஸ்லிம் தலைவர்களோ உரிமைகளை பாதுகாப்பதற்குப் பதில் தாராளத் தன்மையுடன் விட்டுக் கொடுக்கும் வேலையை லாவகமாக கையாள்கின்றார்கள்.

அறிஞர் அஸீஸின் துருக்கித் தொப்பி போராட்டம்.

1905.05.02 ல் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது அவர் அந்த வழக்கில் வாதாடுவதை நீதியரசர் லயட் எதிர்த்தார். அப்போது தான் தொப்பி அணிந்து வாதாடுவது எனது உரிமை நான் அதனை கழற்ற முடியாது என மறுத்தார் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள். இதன் போது ஏற்பட்ட பிரச்சினையில் சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இந்தச் செய்தி அக்கால முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த அறிஞர் அஸீஸ் அவர்களுக்கு எட்டியது. உடனே அஸீஸ் அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கியஸ்தர்களை அழைத்து1905.10.27 ல் தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமை முஸ்லிம்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடும் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.

போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு முஸ்லிம்களுக்கு விளக்கும் விதமாக நாட்டின் முக்கிய 30 நகரங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அன்றைய கால முஸ்லிம்களின் பிரபல பத்திரிக்கைகளான முஸ்லிம் நேசன், முஸ்லிம் பாதுகாவலன், இஸ்லாம் மித்திரன் போன்றவை இந்த மாநாட்டிற்காக பலத்த விளம்பரங்களை செய்தன. நாடு முழுவதும் மக்களை விழிப்புணர்வூட்டிய அறிஞர் அஸீஸ் அவர்கள் 1905.12.31 ல் மருதானையில் 30 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி துருக்குத் தொப்பி உரிமை மீட்பு மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

போராட்டத்தின் வெற்றி துருக்கித் தொப்பி சட்டமாக்கப்பட்டது.

துருக்கித் தொப்பிக்கான அறிஞர் அஸீஸ் தலைமையிலான போராட்டத்தின் விளைவாக முஸ்லிம் சட்டத்தரனிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்டது.

மார்க்கத்தில் இல்லாத மார்க்கம் சொல்லாத தொப்பி என்ற ஆடையை ஆங்கிலேய அரசு தடை செய்தது என்பதற்காக உரிமையை எவரும் பறிக்க முனையக் கூடாது என்பதை ஆங்கிலேய அரசுக்கு அறிவிக்கும் முகமாக அறிஞர் அஸீஸ் அவர்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள் 1905 காலப் பகுதியில்.

மார்க்கம் காட்டித் தராத தொப்பிக்காகவே இவ்வளவு பெரிய போராட்டம் என்றால் மார்க்கத்தின் அச்சாணியாக இஸ்லாத்தின் கேந்திர நிலையமாக இருக்கும் பள்ளிகளுக்காக நாம் எந்தளவுக்கு போராட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தொப்பிக்காக போராடிய சமுதாயம் பள்ளியை விட்டுக்கொடுக்கலாமா?

அன்று சாதாரண தொப்பி விஷயத்திற்காக நமது தலைவர்கள் போராடினார்கள். ஆனால் இன்றைய நமது அரசியல், ஆன்மீகத் தலைமைகளோ நமது உயிர் நாடியான பள்ளிகளையே தாரை வார்ப்பதில் தாராளத் தன்மையை பேணுகின்றார்கள்.

இதுவரைக்கும் சுமார் 24 பள்ளிவாயல்கள் இலங்கையில் தாக்கப்பட்டுள்ளன. சில பள்ளிவாயல்கள் மூடுவிழா கொண்டாடிவிட்டன. சில பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பள்ளிகள் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கின்றன.

இப்படி நாளுக்கு நாள் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது நமது தலைமைகள் தலையணை வைத்து நிம்மதியாக தூங்குவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உயிரைப் பணயம் வைத்துப் போராடினாலும் இறுதியில் தலைமைகளின் உறுதியின்மையினால் பள்ளிகள் தாரைவார்க்கப்படுகின்றதை நினைக்கும் போது கவலை தாங்க முடியவில்லை.

அன்று – தலையில் இருக்கும் சாதாரண தொப்பிக்காகவே போராடிய முஸ்லிம் சமுதாயம். இன்று – தலையை பணிக்கும் பள்ளிகளையே விட்டுக் கொடுக்கும் அவல நிலையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தலைவர்களின் சுய இலாபமும், தலைமைத்துவ மோகமும், பதவி ஆசையும் தான் இன்றைய முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சிப் பாதைக்கு வழி செய்துள்ளது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

புறப்படத் தயாராவோம்.

இது நமது தாய் நாடு.

இங்குதான் நாம் பிறந்தோம்.

இங்குதான் நமது முன்னோர்களும் பிறந்தார்கள்.

இங்குதான் நாம் இறப்போம்.

இங்குதான் நமது முன்னோர்களும் இறந்தார்கள்.

இந்த பூமியை விட்டும் வெளியே செல்ல நாம் ஒன்றும் பிற நாட்டவர்கள் அல்லர்.

இந்த நாட்டின் மைந்தர்கள்.

இனியும் விட்டுக் கொடுக்க இயலாது.

இனியும் மௌனம் காக்க முடியாது.

இனியும் கை கட்டி வேடிக்கை பார்க்க கூடாது.

புறப்படுவோம் போராட்க் களத்தை நோக்கி.

வெற்றி நம் பக்கம் விரைந்து வரும்.

வேடிக்கை பார்ப்பவர்கள் ஓரம் போய் விடுங்கள்.

வீரர்களையும் சோரம் போக வைக்காதீர்கள்.

புறப்படத் தயாராவோம்.

ஜனநாயக வழியில், சுதந்திர வேட்கையில், வெற்றி கோஷத்துடன், கொடியேந்துவோம் வாருங்கள்.

நமது பள்ளிகளை நாமே பாதுகாப்போம்.

அரசியல் சாக்கடைகளும் வேண்டாம். ஆன்மீக பச்சோந்திகளும் வேண்டாம்.

இறைவனின் ஆலயத்தை மீட்டெடுக்க இறைவனுக்காக அர்பணம் செய்யத் துணிந்த இளைஞர்களே!

திரண்டு வாருங்கள்! தீர்வு நமது கையில் துணையாக ஏகன் அல்லாஹ் இருக்கின்றான்.

இன்ஷா அல்லாஹ

* அடுத்த கட்டம் என்பது எது..? ஆயுதம் ஏந்துவதா...??


அன்பின் இலங்கை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே !!!

எங்களை 24 முறையாக குட்டி இருக்கிறார்கள், அத்தனை முறையும் குனிந்து தான் போயிருக்கிறோம். கலந்துரையாடல் என்ற பெயரில் இம்முறையும் அல்லாஹ்வின் இல்லத்தை தாரை வார்த்திருக்கிறோம். கலந்துரையாடலின் போது தீர்கமாக பேசியிருக்க வேண்டும், மாறாக தாரை வார்த்துவிட்டு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று அவர்களை பேசி தீர்க்க கூடாது. அவ்வாறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டால் காயை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்க வேண்டும், ஆட்டத்தை இடை நிறுத்தி இருக்க கூடாது.

முஸ்லிம் அமைச்சர்களை வைத்துக்கொண்டு இனிமேலும் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்று எமது சமூகம் மனப்பால் குடித்தால்..... எம்மை போன்ற அடிமட்ட முட்டாள்கள் வேறு எங்கும் இருக்க முடியாது.

முஸ்லிம்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவை அனைத்தும் நடந்தேறுகின்றன. முஸ்லிம்களை ஒருபதட்ட நிலைக்குள் கொண்டுவந்து, முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இருந்தால் தான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி அவ்வப்போது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, அரசாங்கம் எவ்வளவு தான் துரோகம் செய்தாலும் அவர்களை வெளியேற விடாமல் சதி வலை பின்னப்பட்டுள்ளது.
இதை எமது சமூகம் புரிந்து கொள்ளாத வரை எவ்வளவு தான் துள்ளி குதித்தாலும், கூக்குரல் போட்டாலும் நடக்கப்போவது எதுவுமில்லை.

இதற்கிடையில் BBC க்கு பேட்டி வழங்கிய ஒரு முஸ்லிம் அமைச்சர், எமது ஜனாதிபதி இன பேதம் இல்லாதவர் என்று வாய் கூசாமல் கூறியது மட்டுமில்லாமல் இதற்காக ஒன்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று இழித்துக்கொண்டே கூறிவிட்டு, முடிக்கும் போது EID MUBARAK என்று பெருநாள் வாழ்த்து கூறுகிறார். இவ்வாறான உத்தம புத்திரர்களையும் எமது சமூகம் சுமந்துள்ளது என்பது வேதனைக்குரிய விடயம் தான்.

முஸ்லிம் சமூகம் விழிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது... தருணம் வந்து விட்டது.... என்று எல்லா கட்டுரைகளிலும் எழுதுகிறோம்,,,பேசுகிறோம் ,, கேட்டு கேட்டு புளித்துப்போய் விட்டது,, ஆனாலும் இன்னும் நாம் விழித்தபாடில்லை. கேட்டு புளித்துப்போய் விட்டது,, ஆனாலும் இன்னும் நாம் விழித்தபாடில்லை.

24 வது பள்ளி உடைக்கப்படமுன்பே, பெருநாள் தினத்தில் இருந்து பள்ளிவாசல் உடைப்புக்கெதிராக கையெழுத்து வேட்டை நடத்தினோம். இன்னும் நடத்திக்கொண்டே இருக்கிறோம். அதை வைத்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று புரியவில்லை. அனால் கையெழுத்து வேட்டை முடியும் முன்னமே அவர்கள் கை வரிசையை காட்டிவிட்டார்கள். அடுத்த பள்ளியும் வேட்டையாடப்பட்டுவிட்டது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் அடுத்த கட்டத்துக்கு எம்மை நாமே நகர்த்தாத வரை எமது இருப்பை எம்மால் உறுதி படுத்திக்கொள்ள முடியாது. இப்போது இருக்கின்ற கேள்வி அடுத்த கட்டம் என்பது எது?? ஆயுதம் ஏந்துவதா ??? இல்லை அகிம்சா வழியில் வீதிக்கிறங்குவதா?? இந்த இரண்டில் எந்த ஒன்றை தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் நாங்கள் அடிமட்ட முட்டாள்களே,, ஏனெனில் நாம் கடந்த கால வரலாறுகளில் இருந்து பாடம் படித்துக்கொள்ள வில்லை என்பதுக்கு இதுவே சான்று.

அவ்வாறாயின் எம்மத்தியில் இருக்கும் தீர்வு தான் என்ன
சகோதரர்களே!!

இலங்கையில் நாம் சிறுபான்மையினர் தான் ஒத்துக்கொள்கிறோம்.அனால் உலகிலேயே நாம் தான் பெரும்பான்மையினர். மற்றுமல்லாது பாரிய பொருளாதார வல்லரசுகளை வைத்திருக்கிறோம். அமரிக்காவில் சிறுபான்மையினராக வாழ்ந்தால் இவைகளை வைத்து சாதிக்க முடியாது தான், அதையும் ஒத்துக்கொள்கிறோம். அனால் இலங்கை போன்ற...சிறிய, பொருளாதார இஸ்திர தன்மை அற்ற, கடனுக்கு மேல் கடனாக முஸ்லிம் நாடுகளிடமே கையேந்துகின்ற, பெற்றோலை மானியமாக பெருகின்ற, சர்வதேச போர் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்ற ஒரு நாட்டை சர்வதேச அழுத்தத்துக்கு உள்ளாக்குவது என்பது முயன்றால் மிக இலகுவான காரியம். அனால் இதை தொடந்து தவற விட்டபடி கண்மூடித்தனமாகவே இருந்து வருகிறோம்.

இலங்கை தமிழர்கள், வெறுமனே 6 சதவீதம் தமிழர்களை கொண்ட இந்தியாவையும் புலம் பெயர் தமிழர்களையும் வைத்துக்கொண்டு ஐ. நா வரை சென்று அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். 57 க்கும் அதிகமான பாரிய இஸ்லாமிய நாடுகளை வைத்துக்கொண்டு நாம் என்னதான் சாத்தித்து விட்டோம்?? அரசாங்கத்தை அங்கிருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டுதான் வந்தோம்.

தமிழர்களை போல் நிலைமைகளை சர்வதேச மயப்படுத்தி அழுத்தங்களை பிரயோகிப்பது மட்டுமே காலத்துக்கு பொருத்தமான, நியாயமான ,புத்திசாலித்தனமான தீர்வாக அமையுமே தவிர எமது அமைச்சர்களை வைத்துக்கொண்டு சாதிக்க நினைத்தால் எம்மை என்னவென்று சொல்வது.... குண்டூசியை வைத்துக்கொண்டு முல்லை மட்டுமே அகற்ற முடியும். அனால் நாம் அதை வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பர்கிறோம். ஆயுள் முழுக்க முயன்றாலும் அது நடக்கவே நடக்காது

அனால் இதற்கு நாமே முட்டுக்கட்டையாக இருக்கிறோம். தாங்கள் தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் பாரிய நாட்டுப்பற்றுள்ள ஒரு கூட்டமாக தன்னை அரசாங்கத்துக்கு மத்தியில் காட்ட எத்தனிக்கின்றது. நாட்டிற்குள் இருக்கும் பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம், எக்காரணத்தை கொண்டும் வெளியாலை உள்ளே விடமாட்டோம்.........என்கிறார்கள்

அது மட்டுமில்லாமல், ஒல்லாந்தர் காலத்திலும் எமது முன்னோர்கள் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். போர்துகேயர் காலத்திலும் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெரும் போதும் அப்பிடித்தான் இருந்தார்கள் என்று வரலாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்

ஆனால் அன்று ஏக்கர் கணக்கில் முஸ்லிம்களுக்கு பட்டயம் எழுதி கொடுத்தவர்களோ அல்லது செனரத் மன்னனோ அல்லது 2 ஆம் இராஜ சிங்கனோ இன்று இல்லை என்பதை மறந்து விட்டார்கள்..... இருக்கும் 2 பேச் நிலத்தில் இருந்தும் அடித்து துரத்துவதற்கு தயாரான அரசாங்கமே இருக்கிறது என்பதையும் மறந்து விட்டார்கள்.

அது போக முஸ்லிம்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க என்றே உருவாக்கப்பட்ட எமது சூரா சபையின் வகிபாகம் இந்த பிரச்சினையில் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் அரசாங்கத்துக்கு மகஜர் கொடுப்பதை விட்டு விட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தலில் ஈடுபட்டால் பெறுபேறு நன்றாக அமையும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அதற்கு பொருத்தமானவர்கள் உள்ளே இருப்பதாக தான் அறிகிறோம். இந்த செய்தியை அவர்களுக்கு எத்தி வையுங்கள்.

சமூகத்தின் இன்றைய தலைவர்களே!! எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு வழிகாட்டலையும், காத்திரமான கள நிலவரத்தையும் உருவாக்கித்தாருங்கள். அடித்தளத்தை இட்டுத்தாருங்கள். கோபுரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..... இன்ஷா அல்லாஹ் .

* அபாபில்கள் உதவிக்கு வரப்போவதில்லை நீங்கள் முயற்சிக்காமல் அல்லாஹ்வின் உதவியும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை !!!


அபாபில்கள் உதவிக்கு வரப்போவதில்லை நீங்கள் முயற்சிக்காமல் அல்லாஹ்வின் 
உதவியும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை !!!

அவர்கள் உங்களை விரட்டிவிரட்டி 
அடிப்பார்கள் நீங்கள் எல்லோரும் ஓடுங்கள் என்று அல்லாஹ் கூரவில்லை பதுரு களத்தில்
1000பேரை எதிர்த்து 300பேர் வெறுங்கையுடன் செல்லவில்லை !!அதாவது ஒருயுத்தத்திட்கு ஆயத்தங்கள் செய்தார்கள் நபியவர்கள் ஆயுதங்களை சேகரித்தார்கள் பயற்சிகளை கடமையாக்கினார்கள் அகழிகள் வெட்டினார்கள் சிறந்த திட்டத்துடன் செயல் பட்டார்கள் அது எமக்கு ஒருமுன்மாதிரி அல்லவா ?!!!!
அதற்காக ஆயுதங்களுடன் அவர்களை தேடிசென்று அடிப்பது என்று அர்த்தம் இல்லை உங்களை தயார்படுத்துங்கள் எங்களின் வயதான பெற்றோர்களை குழந்தைகளை
பெண்களை சகோதரிகளை எங்கள் வீடுகளை வியாபரஸ் த்தலங்களை எங்கள்
மஸ் ஜித்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு !!!!ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு !!
இனவாதிகள் எம்மைதேடி எங்கள் வீட்டு வாசலுக்கு வருகிறார்கள் ஓடினால் எம்மை விரட்டிவிரட்டி வெட்டுவார்கள் எதிர்த்துநின்றால் சேதங்களை இழப்புகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பதை மனதிட்கொள்ளவும் இவர்கள் திடீர் என்று வரலாம்
இல்லாவிட்டால் கூட்டமாக கூக்குரல் இட்டு ஆர்பாரித்துக்கொண்டு வரலாம்
உங்களுக்குள் ஒருபாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் தப்லீக் தரீக்கா
தவ்ஹீத் என்று பிரிந்து நிற்க வேண்டாம் நீங்கள் எந்த இயக்கம் என்று கேட்டு வெட்ட
மாட்டார்கள் முஸ்லிமா என்று கேட்டு வெட்டுவார்கள் !!
மணியடித்து ஒன்றுசேர்கிறார்கள் பின்கூட்டமாக வருகிறார்கள்பர்மியரோகிங்கோயாக்கள்

போன்று நாங்கள் ஓடி இறக்க வேண்டுமா போராடி சஹீத் ஆக வேண்டுமா தீர்மானித்துக்கொள்ளவும் !!!!
துடிப்பான இளைஞ்சர் குழுக்களை அமைத்துக்கொள்ளுங்கள் கம்பு முதல் கத்திவரை
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டும் கடைகளில் 1000ரூபாய் கொடுத்தால்
மீன் வெட்டும் கத்தி கிடைக்கும் தெலி பிகிய (சவரக்கத்தி )வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்
இரவு நேரங்களில் விழிப்பாக இருங்கள் பகல் நேரங்களில் தயாராக இருங்கள்
ஒன்றாக இருக்க வேண்டாம் சிறிய 10பேர் அடங்கிய குழுக்களாக உங்கள் பகுதிகளில்
இருங்கள் உங்களுக்குள் செல் பேசிமுளம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
ஏதாவது ஒருஇடத்தில் பிரச்சினை என்றாலும் உடன் அவ்விடம் செல்ல ஆட்டோ முதல்
வேன் வரை வாகனங்களை தயார்நிலையில் வைத்திக்கொல்லுங்கள் கத்திக்கூட வாங்க வசதி இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுங்கள் கெட்டப்பொல் தயாரித்துக்கொள்ளுங்கள் தற்பாதுகாப்பு கலை கற்ற சகோதரர்கள் உங்களில் இருப்பின் அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் மிளகாய் தூல் பக்கட்கனக்கில் வாங்கி வைத்துக்கொள்ளவும் கூட்டமா க வரும்போது அவர்கள் முகங்களில் வீசுங்கள் உங்களால் சமாளிக்க முடியாவிட்டால்
வாகனங்களை அவர்கள் மேல் ஏற்றுங்கள் ஒற்றுமையாக திட்டம் மிட்டு செயல் படுங்கள்

நான் பார்க்கும் உலகம்

Wednesday, August 7, 2013

* நவீன அபூ ஜஹீலுக்கு ஜம்மியாவின் பிரார்தனை!!!


நவீன அபூ ஜஹீலுக்கு ஜம்மியாவின் பிரார்தனை!!!

யாஅல்லாஹ் V I P வாசலான ரைஹான் எனும் சுவர்கத்து 

வாசலை எங்கள் ஜனாதிபதிக்கு திறந்து வைப்பாயாக ,?!!!!

நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உணவளித்த மகிந்தவுக்கு

ரைஹான் எனும் சுவன வாசலை திறந்து விடு !!!

கண்டி ஜம்மியத்துல் உலமாக்களின் தலைவர் கண்ணியமிக்க மெளலவிபசஸ்லுலின் உருக்கமான துஆ பிரார்த்தனையில் ஜனாதிபதி மாளிகை கண்ணீரில் நனைந்தது !!

முஸ்லிம்களின் மெளனக் குரல் ரவுப் ஹகீம் !! சிம்மக்குரல் அஸ்வர் !!அதிரடி

அப்துல் காதர் !!கிழக்கின் விடிவெள்ளி ஹிஸ்புல்லா!! அமைச்சர் கோட்டா பவுசி !!

முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி பசீர் சேகுதாவுத் !!இன்னும் கொலைக்காரன்

கொள்ளைக்காரன் !!பொறம்போக்கு மொள்ளமாரி !!மூலையை அடகுவைத்தவன் !!

லூசு அரலூசு காலூசு முழு லூசு என்று ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு

இப்தாரை கொண்டாடினார்கள் !!இராப்போசன விருந்தில் இப்தார் ஆடிப்போனது

கூத்தாட்டம் முடிய அத்திடிய பள்ளிவாசலைமூடும் உத்தரவு பறந்தது !!


ஜனாதிபதியின் இப்தார் (படங்கள் இணைப்பு)





ஜனாதிபதி மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 03/08/2013 கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொ

* மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் 'மாட்டு'த்தனமான தீர்மானங்கள்........... ??


மாடறுக்கும் மடுவங்களாக மாறப்போகும் மஸ்ஜிதுகள் .........????? ACJU வினரின் 'மாட்டு'த்தனமான தீர்மானங்கள்........... ??



சென்ற வாரம் இலங்கையில் அநேகமாக எல்லா மஸ்ஜித்களிலும் சொல்லிவைத்தால் போல ஒரே தொனியிலான ஜும்மாஹ் பிரசங்கங்கள்.



மாடறுக்கும் செய்கைக்கு இலங்கை பெரும்பான்மை பௌத்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காரணத்தினால் ஹஜ்ஜுப் பெருநாளன்று மாடறுத்து 'குர்பான்' செய்யத் தீர்மானித்து இருக்கும் முஸ்லிம் தனவந்தர்கள் தமது பெயரை தமது மஹல்லா பள்ளி வாசல் நிர்வாக சபையினரிடம் பதிவு செய்யுமாறும்,அவ்வாறு முன் கூட்டியே பதிவு செய்தால் அவர்கள் குர்பான் செய்ய இருக்கும் மாட்டுக்கான அனுமதியையும் அந்தக் குறிப்பிட்ட மாட்டை மஸ்ஜித் வளாகத்தில் வைத்து அறுக்கும் வசதியையும் பள்ளி நிர்வாகம் செய்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ACJU விசேட செயல் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் ஜும்மாஹ் பிரச்சாகரர்கள் பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.

மாடறுப்பதட்கு தாம் தடையாக இருப்பதற்கு காரணம் சொல்லும் பெரும்பான்மை இன மக்கள் ஆட்டை அல்லது கோழியை அறுத்து மக்கள் உணவாக கொள்வதற்கு தடை விதிப்பதில்லை.

ஆகவே, இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் தினத்தன்று மாட்டை தவிர்த்து விட்டு ஆட்டை குர்பான் செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும்.


பூதாகரமாக காட்டப் படுகின்ற விடயம் இவ்வளவு எளிதாக சமாளிக்க கூடியதாக இருக்கும் நிலையினை கருத்தில் கொள்ள மறுத்து மாடறுக்கும் செய்கையை இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் உரிமையாக கருதி அதற்காக வரிந்துக் கட்டி நாம் எப்படியும் மாட்டை அறுத்தே தீருவோம் என்று ஒற்றைக் காலில் நிற்பது சாணக்கியமான செயல் அல்ல என்பதை ACJU புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளி வாசல் முற்ற வெளியில் இரு கரமேந்தி யாசிக்கும் மக்கள் தொகை இன்னும் குறைந்த பாடில்லை.இவர்கள் இன்னும் யார் கண்ணிலும் படவில்லை.

பள்ளிவாசல்களை சுற்றிலும் வாழ்கின்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒரு வேளை உணவுடன் மட்டுமே தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த ஏழைகளின் வாழ்வியல் ஆதாரத்தை மேம்படுத்தும் செயல் திட்டங்கள் பள்ளிவாசல்களிலோ அல்லது இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவ தகுதி தமக்கு இருப்பதாக வாதிடுகின்ற ACJU விடமோ எள்ளளவும் இல்லை.

ஆனால், ஆச்சரியமாக மாட்டை அறுக்கும் செயலுக்கு புனிதத்துவ சாயம் பூசிக்கொண்ட நமது உலமாக்களோ இலங்கை முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியல் ஆதாரம் அறுக்கப் படுகின்ற மாடுகளிடம் இருப்பது போன்றதொரு மாயையை உருவாக்கி தம்மை ஏமாற்றிக் கொள்வது மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்களையும் நம்பி ஏமாறுமாறு வற்புறுத்தும் செய்கையில் பொதிந்திருக்கும் இரகசியம் என்ன?

ACJU வினருக்கு இலங்கை முஸ்லிம்களுடன் தனிப்பட்டதொரு கோபம் இருக்கிறது.

அதென்ன கோபம்?

பொது பலசேன என்ற தீவிரவாத பௌத்த அமைப்பு ஹலால் தரச் சான்றிதழுக்கு எதிராக ACJU வுடன் முட்டிக் கொண்ட பொழுது ACJU எதிர்பார்த்திருந்த மக்கள் ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ACJU வினரின் உள் இரகசியங்களை அறிந்திருந்த மக்கள் யாருக்குமே தமது ஆதரவை நல்காது அமைதி காத்தார்கள்.

ACJU வினரோ ஓடாத இடமில்லை.

அரசியல்வாதிகளென்றும், பௌத்த தேரர்களென்றும்,பள்ளிவாசல் ஜமாத்தினர்கள் என்றும் மாறி மாறி ஓடினார்கள்.மண்டியிட்டார்கள்.மன்றாடினார்கள்.

யாருமே கண்டுக் கொள்ளவில்லை.

இறுதியில் தமது தோல்விக்கு ஆயிரமாயிரம் நொண்டிச் சாட்டுக்களைக் கூறிக் கொண்டு அமைதியானார்கள்.

இப்பொழுது அப்பொழுது அவர்களுக்கு உதவாத அப்பாவி முஸ்லிம் மக்களை பழிவாங்க நல்லதொரு வாய்ப்பு கனிந்திருக்கிறது.

புனித மஸ்ஜிதுகள் இப்பொழுது முஸ்லிம் ஆண்களது ஓய்வு தளங்களாக மாறியிருக்கும் அவலத்தை பகல் நேரம் பள்ளிவாசல்களில் உறங்கும் மக்களைப் பார்த்தால் புரிந்துப் போகும்.

வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசல்களில் தங்கி ஓய்வுக் கொள்ள வரும் 'ஜமாத்தினரின்' உணவுத் தேவையை கருத்தில் கொண்டு இப்பொழுது எல்லாப் பல்லிவாசல்களிலும் பெரியதொரு அடுக்களை கட்டியிருப்பதும் நாம் அறிந்த இன்னுமொரு இரகசியம்.

இப்பொழுது பாக்கியிருப்பதோ மாடருக்கும் மடுவம் மட்டுமே.

இந்த வருட ஹஜ்ஜில் ACJU அதற்கான செயல் திட்டங்களையும் வகுத்து விட்டதாம்.

அந்த செய்கையின் எதிர் விளைவாக எதிர்காலத்தில் மாடருக்கும் மடுவங்களாக மாறி நிற்கின்ற பள்ளி வாசல்களை இழுத்து மூடுமாறு தீவிரவாத பௌத்தர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவது நிச்சயம்.

அவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பொழுது நமது தலைமைத்துவ ACJU முல்லாக்கள் இலங்கை முஸ்லிம்களைப் பார்த்து இப்படி சொல்லுவார்கள்.

"நீங்கள் நமக்கு 'ஹலால்' பிரச்சினையின் பொழுது உங்களது பூரண ஆதரவை தந்திருந்தால் உங்களுக்கு இன்று இப்படியானதொரு சோதனை வந்திருக்காது........எல்லாம் அவன் செயல்."

* ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் ஹலாலுக்கு ஆப்புவைத்த கூட்டம்


ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் ஹலாலுக்கு ஆப்புவைத்த கூட்டம் 
மீண்டும் தலைமைத்துவத்தை தனது கட்டுப்பாட்டின் கீல்கொண்டுவந்துள்ளது !!!!


மீண்டும் ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக றிஸ்வி முப்தி – ஜனாதிபதி வாழ்த்து!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைஹ் ரிஸ்வி முப்த்தி அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவராக 4 வது முறையாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்காக அவர் தெரிவு செய்யப்பட்டமைக்காகவே ஜனாதிபதி இவ் வாழ்த்தினைத் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இது விடயம் பேசப் பட்டதும் உடனே தொலைபேசி மூலம் ரிஸ்வி முப்த்தியை தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாக குழுவில் கடந்தமுறை பணியாற்றிய பலரே தொடர்ந்தும் புதிய நிர்வாக குழுவிலும் பணியாற்றவுள்ளதாக ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் கூறினார்.

* கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்!!


ராஜபக்ஸ சகோதரர்களின் இப்தார் அரசியல் !!!தலைவர்கள் நீடூடி வாழ பிரார்த்தனை செய்ய முண்டியடிக்கும் நபிவாரிசுகள் !!!!!!
கோத்தாவின் இப்தாரில் உலங்கு வானுர்தியில் உலமாக்கள் தரையிரக்கம் செய்யப்பட்டார்கள் !!
பாதுகாப்பு செயலாளருக்காக நல்லாசிவேண்டி சிங்களத்தில் துஆ கேட்டு நிகழ்ச்சியை அமர்கலப்படுத்தினார்கள் உலமாக்கள் !!
இரண்டாவது இப்தார் கண்டி ஜனாதிபதிமாளிகையை அதிரவைத்தது !!ஜனாதிபதிக்கு ரைகான் சுவர்க்க வாசலை திறந்து விட மன்றாடினார்கள் !!
3 ஆவது இப்தார் - பஷில் நோன்பு கஞ்சி குடித்தார் !!கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்தது என்னவோ முஸ்லிம் சமூகத்தின் கண்ணீர்!!அந்த கண்ணீருடன் தலைவர்கள் நீடூடி வாழ பிரார்த்தனை செய்ய முண்டியடிக்கும் நபிவாரிசுகள் !!!!!!
புற்­று­நோய்க்கு ஆரம்­பத்தில் மருந்து கட்­டு­வ­துதான் நல்­லது. நாட்­பட்ட புற்­று­நோயை தீர்த்து வைக்க முடி­யாது. இன­வா­தமும் புற்­று­நோய்தான். ஒரு புள்­ளியில் ஆரம்­பித்து மெல்ல மெல்ல முழு நிலப்­ப­ரப்­பையும் சம்­ஹாரம் செய்­கின்­றது. நாம் கண்ட யுத்­தமே இதற்கு அத்­தாட்­சிதான்.

அப்­படிப் பார்த்தால், தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்ட போது முஸ்லிம் தலை­மை­களும், அறி­ஞர்­களும், சட்­டத்­த­ர­ணி­களும், படித்­த­வர்­களும் தங்கள் தங்கள் பணியை சட்­டத்­திற்கு உட்­பட்டு நேர்­மை­யாக செய்­தி­ருந்தால், நிலைமை இவ்­வ­ளவு மோச­மாகி இருக்­காது. மஹி­யங்­க­னை­யி­லுள்ள முஸ்­லிம்­களின் கண்ணீர் இந்த நோன்பு காலத்தில் கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்­தி­ருக்­காது.

அதேபோல், இச்­ச­மூ­கத்­தி­லுள்ள அறி­ஞர்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் வைத்­தி­யர்­களும் படித்­த­வர்­களும், பொன்­னா­டைக்­காக அலையும் கூட்­டமும் என்ன செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்?

பத்­தி­ரி­கையில் வரும் செய்­தியைப் படிப்­பது, ஒரு தேநீர் கடையில் குந்தி கதைப்­பது, வீட்­டுக்குச் சென்றால் ‘மானாட மயி­லாட’, ‘அசத்­தப்­போ­வது யாரு’ என செய்­மதித் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களின் தாலாட்டில் தூங்­கிப்­போ­வது. யார் ஏற்றுக் கொண்­டாலும் ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் இதுதான் முஸ்லிம் சமூ­கத்தின் உட்­புற யதார்த்தம்.

இனியென்ன, அடுத்த பிரச்சினை வரும் வரைக்கும்…

அரசியல்வாதிகள் தேர்தலில் லயித்திருப்பார்கள்,

முஸ்­லிம்கள் நோன்புப் பெருநாள் ஆடைக் கொள்வனவில் திளைத்திருப்பார்கள்.

இது விளம்பர இடைவேளை!


* கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்!!


கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்!!


 இலங்­கையை  ஆட்சி செய்த கடைசிச் சிங்­கள  மன்­ன­னாக கரு­தப்­படும்  ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்­கனை கொலை­வெ­றி­யுடன் ஆங்­கி­லேயப் படைகள் துரத்தி வரு­கின்­றன. உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு ஓடி­வந்த மன்னன் மகியங்கனை நகரை ஊட­றுத்து அதற்கு அரு­கி­லுள்ள சிறு கிரா­ம­மான பங்­க­ர­க­ம­வுக்குள் நுழை­கின்றான்.
அங்கு விவ­சாய குடும்­பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்­ணொ­ருவர் (பாத்­திமா என அறி­யப்­ப­டு­கின்றாள்) நெல்லை காய­வைத்துக் கொண்­டி­ருந்தார். மன்­னனின் நிலையைக் கண்­டதும் அங்­கி­ருந்த பொந்து போன்ற அமைப்­புள்ள பாரிய மரத்தின் மறைவில் ஒளிந்து கொள்­ளு­மாறு அப்பெண் மன்­ன­னுக்கு சாடை செய்­கிறாள். மன்­னனும் மறைந்து கொள்­கிறான்.

ஆவே­சத்­துடன் அங்கு வந்த ஆங்­கி­லே­யர்கள் மன்­னனைப் பற்றி அவ­ளிடம் வின­வு­கின்­றனர். அவளோ தெரி­யா­தென கூறி­வி­டு­கின்றாள். ஆத்­திரம் மேலிட்ட ஆங்­கி­லேயப் படைகள் அவளை அங்­கேயே பலி­யெ­டுத்து விட்டு சென்­று­வி­டு­கின்­றன.

வெளியில் வந்த மன்னன் உயி­ரி­ழந்து கிடக்கும் பாத்­தி­மாவை பார்த்து ‘மா ரெக லே’ (என்னைக் காத்த இரத்­தமே) என்ற வார்த்­தையை பிதற்­றி­ய­வ­னாக தேம்பித் தேம்பி அழு­கின்றான். சிங்­கள பழங்­க­தை­களில் ‘உயிர்­காத்த உத்­தமி’ என வர்­ணிக்­கப்­பட்ட இப் பெண் செய்த தியா­கத்­திற்கு நன்­றிக்­க­ட­னாக அந்த ஊரையே அப்­பெண்ணின் குடும்­பத்­திற்கு மன்னன் எழுதி வைத்­த­தாக வர­லாறு கூறு­கின்­றது. அதற்­கான உயில் பத்­திரம் 1956 வரை பதுளை கச்­சே­ரியில் இருந்­த­தாக வர­லாற்­றா­சி­ரி­யர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால், இன்று என்ன நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. உயில் எழுதிக் கொடுக்­கப்­பட்ட பங்­கரகம பிர­தே­சத்­தி­லி­ருந்து சில கிலோ­மீற்றர் தொலைவில் இருக்­கின்ற மஹி­யங்­கனை நகரில் அமைந்­துள்ள சிறிய பள்­ளி­வாசல் அல்­லது தொழுகை நடத்­து­மிடம் நாட்­க­ணக்­காக மூடிக் கிடக்­கின்­றது. எந்தச் ‘சாவியை’ கொண்டும் இதனை திறக்க முடி­யாமல் நாதி­யற்று நிற்­கின்­றது முஸ்லிம் சமூகம்.


முத­லா­வது கல­வரம்

 இலங்­கையின் முத­லா­வது இனக் கல­வரம் 1983 ஜூலைக் கல­வ­ர­மல்ல. 1883 மார்ச் மாதத்தில் கொழும்பில் சிங்­கள – கிறிஸ்­தவ மதக் கல­வரம் ஒன்று இடம்­பெற்­றது. இருப்­பினும் இது ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கு பர­வ­வில்லை. ஆனால் பாரிய அழி­வு­க­ளுக்கு வித்­திட்ட முத­லா­வது இனக் கல­வரம் சிங்­க­ள­வர்­க­ளுக்கும்  முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் 1915 மே மாதம் இடம்­பெற்­றதே என்­பதை நினை­வு­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது.

கம்­பளைப் பள்­ளி­வாசல்  விவ­கா­ரத்தை ஒட்­டி­ய­தாக கண்டி   காசல் ஹில் பள்ளிச் சூழலில் இக்­க­ல­வரம்  வெடித்­தது. அப்­போ­தி­ருந்த பௌத்த மறு­ம­லர்ச்­சி­வாதி ஒருவர் உள்­ள­டங்­க­லாக சிங்­கள தலை­மைகள் சிலர் வெளி­யிட்ட கருத்துக்­களே  இதற்கு மூல கார­ண­மாக அமைந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. பின்னர்  இக்­க­ல­வரம் கொழும்பு, புத்­தளம் போன்ற பிர­தேசங்­க­ளுக்கும் பர­வி­யது.

இதன்­போது, 4075 கொள்ளைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றா­கவும், சுமார் 350 கடைகள் எரிக்­கப்­பட்­ட­தா­கவும் 86 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும்,  17 பள்­ளி­வா­சல்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­தா­கவும், 20 இற்கு மேற்பட்டோர் கொலை செய்­யப்­பட்­ட­துடன் 180 இற்கும் அதி­க­மானோர் காயங்­க­ளுக்கு உள்­ளா­ன­தா­கவும் வர­லாற்று ஆய்­வா­ளர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். அதற்குப் பிறகு 1939 இல் சிறி­ய­ள­வான சிங்­கள – தமிழ் கல­வ­ரமும் 1983 இல் கறுப்பு ஜூலைக் கல­வ­ரமும் நிகழ்ந்­தே­றின.

இச்­சம்­ப­வங்­களை நன்­றாக கவ­னிக்க வேண்டும். இலங்­கையின் முத­லா­வது  இனக் கல­வ­ரமே பள்­ளி­வா­சலை   மைய­மாகக் கொண்­டுதான் ஏற்­பட்­டுள்­ளது. அதுவே   மேற்­சொன்ன   துர­திர்ஷ்­ட­வ­ச­மான அழி­வு­க­ளுக்கும் இட்டுச் சென்றது.

இந்த வர­லாற்று உண்­மையில் இருந்து பாடம் படிக்­காமல், சிறு­பான்மை  மக்­களின்  குறிப்­பாக மத ரீதி­யாக மிகுந்த  உணர்வு மேலீடு   உள்­ள­வர்­க­ளான முஸ்­லிம்­களின் அடை­யா­ளங்­களை இலக்கு வைத்து போரா­டு­வதன் பார­தூ­ரத்­தையும் பள்­ளி­வா­சல்­களை அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கு­வதில் உறைந்­தி­ருக்­கின்ற அநீ­தி­யி­ழைப்­பையும் கணக்­கெ­டுக்­காமல் சிங்­கள கடும்­போக்கு சக்­திகள் நடந்து கொள்­வது ஏனென்­றுதான் புரி­யு­தில்லை.

பள்­ளிக்குப் பூட்டு

மஹி­யங்­க­னையில் முன்னர் பள்­ளி­வாசல் என்று அழைக்­கப்­பட்­டதும், பின்னர் சிறிய தொழு­மிடம் என வரை­யறை செய்­யப்­பட்­ட­து­மான ஒரு மதஸ்­த­லத்தின் உள்ளே பன்­றியின் இரத்தம் வீசப்­பட்டு, அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டு கடைசியில் மூடப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான சம்­ப­வங்­களை  கோர்த்துப் பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு, ஏதோ­வொரு  நோக்­கத்­திற்­காக  எல்­லாமே நன்­றாக திட்­ட­மிட்டு  செய்­யப்­பட்­டி­ருப்­பதை  அறிந்து கொள்ள அவ்­வ­ளவு நேர­மெ­டுக்­காது.

பெரும்­பான்­மை­யாக சிங்­க­ள­வர்­களை குடி­யி­ருப்­பா­ளர்­க­ளாக கொண்ட மஹி­யங்­கனை நக­ர­மா­னது  மகா ஓயா – கண்­டிக்கு இடை­யி­லான ஏ26 நெடுஞ்­சா­லையில் அமைந்­தி­ருக்­கின்­றது. ஏ26 நெடுஞ்­சா­லையில் கிழக்கு மாகாணத்திற்கும் மத்­திய மாகா­ணத்­திற்கும்  இடை­யி­லுள்ள ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்த  ஒரு பிர­தே­ச­மாக இது உள்­ளது.  மத்­திய  மலை­நாட்டில் மேல்­நோக்கி பய­ணிப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்ட 17 ஊசி வளை­வு­களின் (பெண்ட்) கார­ண­மா­கவே  இந்­ந­கரம்  பிர­பல்­ய­மா­னது  என்றே கூற­வேண்டும்.

இங்கே நீண்­ட­கா­ல­மாக இருந்த ஒரு வழி­பாட்­டி­டம்தான் இப்­போது மூடு­விழா கண்­டுள்­ளது. இந்த இடம் தொடர்பில் இருக்கும் மாற்­றுக்­க­ருத்­துக்­களும் விளக்­க­மின்­மை­களும் நாளுக்­குநாள் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. நம்­ப­க­மான தக­வல்­களின் பிர­காரம், இது வக்பு சபையில் பதி­வு­செய்­யப்­பட்ட ஒரு உத்­தி­யோ­க­பூர்வ பள்­ளி­வாசல் அல்ல என்றே தெரி­கின்­றது. ஆன­போதும், தொழு­வ­தற்­காக பல ஆண்­டு­க­ளாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஒரு இடம் என்­பதை மறுதலிக்க இய­லாது.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள வேடுவ பழங்­கு­டி­யி­னரின் தலை­வ­ரான ஊரு­வ­டுகே வன்­னி­யத்­தோவின் வார்த்­தை­களில் பல நிதர்­ச­னங்கள் மறைந்­துள்­ளதை குறிப்­பிட்­டாக வேண்டும். ‘தான் அறிந்த காலத்தில் இருந்து முஸ்­லிம்­களின்  பள்­ளி­வாசல்  ஒன்று  பங்­க­ர­கம்­மன  பிர­தே­சத்தில்  அமைந்­துள்­ளது. இலங்­கையில்  வாழும் 23 ஜாதி­களும்   தங்­க­ளுக்கு விரும்­பிய   மதத்தைப்   பின்­பற்­று­வ­தற்கு உரி­மை­யு­டை­ய­வர்கள்.

எனவே, முஸ்­லிம்­களும் அப்பள்­ளி­வா­ச­லி­லேயே        மத­வ­ழி­பாட்டை மேற்­கொள்­ளலாம். அதற்கு மேல­தி­க­மாக, மூன்று முக்­கிய பௌத்த ஸ்தலங்­க­ளுக்கு  நடுவில் நகரில்  ஒரு பள்­ளி­வாசல் தேவை­யில்லை’ என்ற அர்த்­தப்­பட அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இவ­ரது கருத்­தின்­படி, மஹி­யங்­கனை பெரும்­பா­கத்­திற்கு அருகில் பள்­ளி­வாசல் ஒன்று நீண்­ட­கா­ல­மாக பங்­க­ர­கம்­ம­னவில் இருந்­துள்­ளது. அப்­ப­டி­யானால்  முஸ்­லிம்­களும்   வாழ்ந்து இருக்­கின்­றார்கள் என்­பது உறு­தி­யா­கின்­றது. ஆனால், யாரும் எந்த மதத்­தையும் பின்­பற்­றலாம் என்ற கருத்தில் உடன்­ப­டு­கின்ற இனங்­களின் தொன்­மை­ய­றிந்த வேடுவ தலை­வ­ருக்கு, மூன்று பௌத்த தலங்­க­ளுக்கு நடுவே – ஒதுக்­குப்­பு­ற­மா­க­வேனும் முஸ்­லிம்­க­ளுக்­கான ஒரு வழிபாட்டிடம்  இருந்­து­விட்டுப் போகட்­டுமே என்ற நல்­லெண்ணம் ஏன் வர­வில்லை என்­பது அள­வு­க­டந்த ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரி­யது.

அப்­ப­டி­யாயின் இவர்­க­ளது ‘மதங்­களை பின்­பற்றும் உரிமை என்­பது’ 3 இற்கு 1 என்ற விகி­தத்­திலும் சிறு­பான்­மை­யி­னரின் அடை­யாளம் ஒன்று இருப்­பதை உறு­திப்­ப­டுத்த திரா­ணி­யற்­ற­தா­கவே உள்­ளது.

சந்­திக்க முயற்­சிகள்

 மஹி­யங்­கனை விவ­காரம் புனித நோன்பு காலத்தில்  முடுக்­கி­வி­டப்­பட்­ட­தாலோ என்­னவோ, முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு    சற்று சூடும் சுர­ணையும் சமூ­கப்­பற்றும் அதி­க­ரித்­தி­ருந்­ததை காண முடிந்­தது. அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக ஒலித்த குரல்கள், ஒரு­மித்த குர­லாக ஒலிக்க தலைப்­பட்­டன. ஏனென்றால், முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீதோ அல்­லது இன்­ன­பிற சமய அடை­யா­ளங்­களின் மீதோ இன­வா­தி­களும், கடும்­போக்கு சிங்­கள அமைப்­புக்­களும் குறி­வைப்­பது இது முதற்­த­ட­வை­யல்ல. கடைசித் தடவை என்­ப­தற்­கான உத்­த­ர­வா­தமும் இல்லை.

எனவே, சில முக்­கிய அமைச்­சர்கள் அரச தலை­மை­யிடம் நிலை­மையை எடுத்துக் கூறினர். இது அர­சுக்கு அப­கீர்த்­தியைக் கொண்­டு­வரும் என்­று­ரைத்­தனர். இதனை திறப்­ப­தற்கு உத்­த­ர­விட வேண்­டு­மென கேட்டுக் கொண்­டனர். சில திருப்­தி­யுறா பதில்­க­ளுடன் சந்­திப்­புக்கள் முடி­வுற்­றன.

இவ்­வா­றான ஒரு சந்­திப்பில் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளிடம் ஜனா­தி­பதி குறிப்­பிட்ட கருத்­துக்கள் மிகுந்த அவ­தா­னத்­திற்­கு­ரி­யன. அதா­வது “இந்தச் சின்ன சின்ன விட­யங்­களை எல்லாம் ஏன் பெரி­து­ப­டுத்­து­கின்­றீர்கள்? முஸ்­லிம்கள் சிங்களவர்கள் விட­யத்தில் செய்யும் தவ­று­களை சிங்­க­ள­வர்கள் தூக்கிப் பிடிப்­பதோ பெரி­து­ப­டுத்­து­வதோ கிடை­யாது” என்று அவர் குறிப்­பிட்டார்.

சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கு முஸ்லிம் ஒருவர் செக்ஸ் படம் காண்­பித்த விவ­கா­ரத்தை பெரி­து­ப­டுத்­தாமல் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருந்­ததை உதா­ர­ண­மாக அவர் எடுத்­தி­யம்­பி­யுள்ளார்.

ஜனா­தி­பதி குறிப்­பிட்ட உதா­ரணம் போல நிறைய உதா­ர­ணங்கள் இருக்­கின்­றன என்­பதை முஸ்­லிம்கள் கவ­னத்திற் கொண்டு செயற்­பட வேண்டும். சிங்­களப் பெண் பிள்­ளை­களை காத­லித்து விட்டு கம்­பி­நீட்­டுதல், வீட்­டுக்கு தெரி­யாமல் கூட்டிக் கொண்டு நடத்­துதல், கடை­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளிடம் தவ­றாக நடக்க முற்­ப­டுதல், சிங்­க­ள­வர்­க­ளுக்கு போதைப் பொருட்­களை விற்­பனை செய்தல்… என நிறைய சம்­ப­வங்கள் இன்­றைக்கு இல்­லா­விட்­டாலும் நாளை ஒருநாள், பாரிய பிரச்­சினை ஒன்­றுக்­கான கார­ணி­யாக விளக்கம் தரப்­ப­டலாம். என­வேதான் பிற இனத்­த­வ­ருக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தென்றால் முதலில் தங்­களை சுத்­த­மா­ன­வர்­க­ளாக பேணிக் கொள்ள வேண்டும்.

சந்­திக்க நேர­மில்லை

மேற்­சொன்ன பதில்­களில் முஸ்லிம் மக்கள் திருப்தி கொள்­ள­வில்லை. அவர்கள் தமது தலை­மை­க­ளுக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். இந்தப் பின்­ன­ணியில் 18 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­று­சேர்ந்து ஜனா­தி­பதியைச் சந்­தித்து இது விட­ய­மாக பேசு­வது என்று முடிவு செய்­தனர். ஆயினும் இக்­கூட்­டத்­திற்கே 15 பேர்தான் வந்­தி­ருந்­தனர்.

எப்­ப­டியோ ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தென முடிவு எடுத்­தாலும் அது தொடர்­பாக மேல் மட்­டத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டாலும் அதற்­கான நேரம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. சந்­திப்பு ஒன்­றுக்கு நேரம் ஒதுக்­கித்­த­ரு­மாறு கேட்­ப­தற்கு அரசவரைமுறை ஒன்று இருக்­கின்­றது. முஸ்லிம் தலை­மைகள் அந்த அடிப்­ப­டை­யி­லேயே சந்­திப்­புக்­கான நேரத்தை கேட்­டி­ருப்­பார்கள் என்று நம்­பலாம். இருந்­த­போதும் கூட்­டாகப் போய் பேசு­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை.

இது தேர்தல் காலம். ஊவா மாகா­ணத்தில் தேர்தல் நடை­பெ­ற­வில்லை என்­றாலும்  சிங்­கள மக்­களின் வாக்­குகள் மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணத்தில் அர­சுக்கு தேவை­யாக இருக்­கின்­றது. இதனை வைத்துப் பார்க்­கின்­ற­போது முஸ்­லிம்கள் தரப்பில் நியாயம் இருப்­ப­தாக அரச தலைமை உணர்ந்­தி­ருந்­தாலும் அதனை வெளிப்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்டால் சிங்­கள கடும்­போக்­கு­வாத சக்­திகள் அர­சுக்கு எதி­ராக மக்­களை திருப்­பி­வி­டு­வார்கள் என்ற அபா­ய­நேர்வு சாத்­தி­யத்தை அவர் அறிந்­தி­ருப்பார்.

என­வேதான், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பை மேற்­கொள்­வதில் இருந்து அவர் தவிர்ந்து கொண்டார் என்று கூறு­வதே பொருத்­த­மாக இருக்கும். ஆனால், ஒரே­யொரு கடிதம் கள நிலை­மை­களை தலை கீழாக புரட்டி விட்­டி­ருக்­கின்­றது.

கடி­தத்தின் கதை

மஹி­யங்­கனை பள்­ளி­வா­சலின் நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை எழு­தி­ய­தாக அரச ஊட­கத்தில் செய்தி வெளி­யா­னது. அந்தக் கடி­தத்தில், அங்கு ஒரு பள்­ளி­வா­சலே இருக்­க­வில்லை. அவ்­வா­றான ஒன்றை அமைக்க நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அது ரண்­முத்து கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் இயங்­கி­வரும் எனது நகைக் கடைக்கு உரி­யது. எனது குடும்­பத்­தினர் மத அனுட்­டா­னங்­க­ளுக்­காக இதனை பயன்­ப­டுத்­தி­ய­போதும் (பொது­வான) பள்­ளி­யாக இயங்­க­வில்லை எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இக்­க­டி­தத்தின் உண்­மைத்­தன்மை பற்றி சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றனர். ஆனால், ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதா­கப்­பட்­டது – நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் தனது மனச்­சாட்­சி­யு­டனோ அல்­லது அதனை ஒரு­புறம் ஒதுக்கி வைத்­து­விட்டோ அக் கடி­தத்தை எழுதிக் கொடுத்­தி­ருக்க சாத்­தி­ய­முள்­ளது என்­ப­தாகும். அதேபோல், உயர்­மட்ட அழுத்­தங்­க­ளுக்கு தலைவர் மட்டும் விதி­வி­லக்­காக இருக்க வேண்­டு­மென எதிர்­பார்க்­கவும் முடி­யாது.

ஆனா­லொன்று, தலை­வரின் கடி­தமும் அதில் குறிப்­பிட்ட விட­யங்­களும் உண்­மை­யாயின் தனது சொந்தக் கடையில் பன்றி இறைச்சி வீசிய விட­யத்தை ஏன் சமூகப் பிரச்­சி­னை­யாக காட்ட வேண்டும்? கோரிக்­கை­களை முன்­வைக்க வேண்டும்? என ஏகப்­பட்ட கேள்­விகள் ஏகத்­துக்கு மேலெ­ழு­கின்­றன.

இந்த இடத்தில் ஒரு பதி­வு­செய்­யப்­பட்ட பள்­ளி­வாசல் இருக்­க­வில்லை என்­றாலும், தொழுகை நடத்­து­மிடம் இருந்­தி­ருக்­கின்­றது என்­ப­தற்கு தர்க்­க­வியல் ரீதி­யாக சிறி­ய­தொரு விட­யத்தை முன்­வைக்­கலாம். அதா­வது, பன்றி இறைச்சி, இரத்தம் வீசப்­பட்­ட­மையும் அங்கு தொழுகை நடத்­தா­த­வாறு மூடப்­பட வேண்­டு­மென அழுத்தம் கொடுத்­ததில் இருந்­துமே தெரிந்து கொள்­ளலாம் – அங்கு முஸ்­லிம்­களின் ஏதா­வ­தொரு வழி­பாட்­டிடம் இயங்­கி­யுள்­ளது என்­பதை. தவிர, நகைக்­க­டைக்கு பன்றி இறைச்சி வீசும் அள­வுக்கு இன­வா­திகள் ஒன்றும் முட்­டாள்­க­ளல்ல.

திரா­ணி­யற்ற சமூகம்

புற்­று­நோய்க்கு ஆரம்­பத்தில் மருந்து கட்­டு­வ­துதான் நல்­லது. நாட்­பட்ட புற்­று­நோயை தீர்த்து வைக்க முடி­யாது. இன­வா­தமும் புற்­று­நோய்தான். ஒரு புள்­ளியில் ஆரம்­பித்து மெல்ல மெல்ல முழு நிலப்­ப­ரப்­பையும் சம்­ஹாரம் செய்­கின்­றது. நாம் கண்ட யுத்­தமே இதற்கு அத்­தாட்­சிதான்.

அப்­படிப் பார்த்தால், தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்ட போது முஸ்லிம் தலை­மை­களும், அறி­ஞர்­களும், சட்­டத்­த­ர­ணி­களும், படித்­த­வர்­களும் தங்கள் தங்கள் பணியை சட்­டத்­திற்கு உட்­பட்டு நேர்­மை­யாக செய்­தி­ருந்தால், நிலைமை இவ்­வ­ளவு மோச­மாகி இருக்­காது. மஹி­யங்­க­னை­யி­லுள்ள முஸ்­லிம்­களின் கண்ணீர் இந்த நோன்பு காலத்தில் கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்­தி­ருக்­காது.

ஆனால், குட்­டக்­குட்ட குனி­தலை ‘பொறுமை காத்தல்’ என்று பெயர் வைத்­தி­ருக்­கின்ற அர­சியல் தலை­மை­களும் சமூக அமைப்­புக்­களும் சிங்­கள கடும்­போக்கு சக்­தி­களை தெளி­வு­ப­டுத்­தவோ, சாமான்ய சிங்­கள மக்­களை அறி­வூட்டவோ இல்லை. தங்­க­ளது ‘மீட்­பர்கள்’ அர­சி­யல்­வா­தி­களே. அவர்­களே எல்­லா­வற்­றையும் செய்ய வேண்­டு­மென முஸ்லிம் மக்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அது நடந்­தி­ருக்கும் – மக்கள் கடந்த தேர்­தல்­களில் மீட்­பர்­களை சரி­யாக தெரிவு செய்­தி­ருந்தால்.

முஸ்லிம் தலை­மைகள் தேர்தல் காலத்­திலும், திரு­மண வீடு­க­ளி­லும்தான் ஒன்­றாக கூட்டுச் சேர்­கின்­றார்கள். மக்­க­ளுக்­காக ஒரு­மித்து குரல் கொடுப்­பது ராஜ­து­ரோகம் என அவர்கள் நினைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் போல. மக்கள் பிர­தி­நி­திகள் தண்­ணீ­ருக்கு ஒன்றும் தவிட்­டுக்கு ஒன்றும் இழுத்துக் கொண்­டி­ருப்­பதால் அச்­ச­மூகம் இன்னும் தொடக்கப் புள்­ளி­யி­லேயே நிற்­கின்­றது.

அண்­மையில் மகி­யங்­கனை பள்­ளி­வாசல் பிரச்­சினை தொடர்பில் அமைச்­சர்கள் சிலர் ரக­சி­ய­மாக பேச்சு நடத்திக் கொண்­டி­ருந்­தனர். இன்னும் சிலர் அடக்கி வாசித்துக் கொண்­டி­ருந்­தனர். ஒருவர் பாரா­ளு­மன்­றத்தில் முழங்கிக் கொண்­டி­ருந்தார். இன்­னு­மொ­ருவர் அதே பாரா­ளு­மன்­றத்தில் ‘மட்­டக்­கு­ளி­யிலும், வெள்­ள­வத்­தை­யிலும் பெண்கள் நடந்து போவது கண்­கொள்ளாக் காட்சி’ என்று வர்­ணித்துக் கொண்­டி­ருந்தார்.

அதேபோல், இச்­ச­மூ­கத்­தி­லுள்ள அறி­ஞர்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் வைத்­தி­யர்­களும் படித்­த­வர்­களும், பொன்­னா­டைக்­காக அலையும் கூட்­டமும் என்ன செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்?

பத்­தி­ரி­கையில் வரும் செய்­தியைப் படிப்­பது, ஒரு தேநீர் கடையில் குந்தி கதைப்­பது, வீட்­டுக்குச் சென்றால் ‘மானாட மயி­லாட’, ‘அசத்­தப்­போ­வது யாரு’ என செய்­மதித் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களின் தாலாட்டில் தூங்­கிப்­போ­வது. யார் ஏற்றுக் கொண்­டாலும் ஏற்றுக் கொள்­ளா­விட்­டாலும் இதுதான் முஸ்லிம் சமூ­கத்தின் உட்­புற யதார்த்தம்.

இனியென்ன, அடுத்த பிரச்சினை வரும் வரைக்கும்…

அரசியல்வாதிகள் தேர்தலில் லயித்திருப்பார்கள்,

முஸ்­லிம்கள் நோன்புப் பெருநாள் ஆடைக் கொள்வனவில் திளைத்திருப்பார்கள்.

இது விளம்பர இடைவேளை!

Saturday, July 20, 2013

* முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படமாட்டாதா?


முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படமாட்டாதா?

lமுஸ்லிம் சமுகத்துக்கு எதிராக கடும்போக்கு இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள் தொடர் நிகழ்வாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை கடந்த பத்து நாட்களுக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் உணர்த்து வதாகவுள்ளன.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை, மகியங்கனை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல், தெமட்டகொடையில் மாடு அறுக்கும் மடுவத்துக்குள் இறைச்சி ஏற்றும் லொறி எரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள், மானவல்லை தெவனகல பிரதேசத்தில் முஸ்லிம்களை வெளியேற்றக்கோரும் கூட்டம் என்பன கடந்த பத்து நாட்களுக்குள் நடந்த முக்கிய சம்பவங்களாகும்.

மகியங்கனை ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தின்போது பள்ளிவாசலில் கண்ணாடிகள் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு,பள்ளிவாசல் நம்பிக்கையாளர் தாக்கப்பட்டது மட்டுமன்றி இஸ்லாம் வெறுக்கின்ற பன்றி இறைச்சியும் பள்ளிவாசலுக்குள் போடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோர் மத்தியிலும் வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கீழ்த் தரமான ஒரு செயலாகும்.

மகியங்கனை சம்பவம் நடக்கும்போது பள்ளிவாசல் அமைந்துள்ள வீதியில் மட்டும் மின்சாரம் சிறிது நேரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்துமுடிந்து சிறிதுநேரத்தில் மின்சாரம் சீர்செய்யப்பட்டுள்ளது. இதன்படி இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எது எவ்வாறானபோதும் இச்சம்பவம் நடந்தவுடன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஊவா மாகாண காணி அமைச்சர் அனுர விதானகமகே பள்ளிவாசலுக்குள் போடப்பட்டிருந்த அழுக்குகளை அகற்றி நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு பள்ளிவாசலில் அடுத்த தினம் ஜும்ஆ நடத்தவும் ஆதரவு வழங்கியிருந்தார். இதற்காக முஸ்லிம் சமுகம் அவருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றது. முஸ்லிம் கவுன்சில் இந்த விடயத்தில் தலையிட்டு ஜும்ஆ தொழுகை நடத்த ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 20 வருட காலமாக ஐவேளைத் தொழுகைக்கு பயன்படுத் தப்பட்ட இப்பள்ளிவாசல் பிரதேச ஆளும்கட்சி அரசியல் தலைமைத் துவத்தின் ஆசிர்வாதத்துடன் கடந்த மாகாணசபைத் தேர்தல் காலம் முதல் ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வளவு காலமும் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் திடீரென நோன்பு வந்ததும் இப்பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறு பள்ளிவாசல்கள்மீது தாக்கு தல் நடத்தவோ எவரும் இதுவரை கைது செய்யப்பட்டோ விசாரணை செய்யப்பட்டதோ இல்லை. இந்த நிலைமையை இனியும் தொடர அனுமதித்தால் நாடு சட்டமும் நீதியும் அமுல்படுத்தப்படாத ஒரு நாடாக மாறிவிடும். பலம்வாய்ந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையுள்ள நமது நாட்டில் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்வது கஷ்டமான காரியமல்ல. முஸ்லிம்கள் விடயத்தில் சட்டமும் நீதியும் அமுல் நடத்தப்படுவதில்லையா என முஸ்லிம்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தெமட்டகொட இறைச்சி மடுவத்தில் 25 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதிமிகு லொறியினை காவி உடையுடையவர்கள் எனக் கூறப்படுவோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மாடு அறுப்பதனை எதிர்ப்பதற்காக இவ்வாறு செய்வதற்கு இடமளிப்பது எவ்வகையில் நியாயமாகும்.

மாவனல்லை தெவனகலையில் கடும்போக்கு அமைப்பொன்று நடத்திய கூட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அமைச்சர் அதாவுட செனவிரத்னவையும் மிக மோசமான முறையில் திட்டித் தீர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரச்சினைகள் இருப்பின் அவற்றை பேச்சுவார்த்தை மேசைகளில் பேசித்தீர்ப்பதற்குப் பதிலாக ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சீர்குலைக்கும் வகையில் கூட்டங்களை நடத்திவிட்டு, பொலிஸார் பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையானது.

தொடரும் நிகழ்வுகள் குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் கடிதங்களை அனுப்பி விட்டு சும்மா இருந்து விடுவதாக சமுகத் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருப்பது போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் குறிப்பாக ஆளும் கட்சியிலிருப்போர் இச்சம்பவங்கள் குறித்து ஆழமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

அனுராதபுரம் தர்கா தாக்கப்பட்டது முதல் மகியங்கனை பள்ளி வாசல் தாக்கப்பட்டது வரை சுமார் 25 பள்ளிவாசல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் அறிக்கை யில் சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை சட்டமும் நீதியும் அமுல்படுத்தப் படாத ஒருநிலை உருவாகி வருகின்றதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தப் பின்னணியில் முஸ்லிம்களின் இருப்பு, எதிர் காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது.

தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள வேளையில் தம் பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக நாட்டில் நிதி நியாயத்தை மதிக்கும் சிறு பான்மையினர் பற்றி நல்லபிப்பிராயம் கொண்டுள்ள சக்திகளது ஆதரவினையும் பெற்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே இன்றைய சூழலில் சிறந்த தாக இருக்கும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* புதையல் காக்கும் பூதங்க்கல் !!



புதையல் காக்கும் பூதங்க்கல் !!

முஸ்லிம் தலைமைகள் எங்கள் காவலர்கள் என்று ஏமாந்து விடவேண்டாம் !!

அது கள்வர்களின் கூட்டம் வாக்குகளை பேரம் பேசி கோடிகளில் கொள்ளையடித்து 

விட்டார்கள் !!காவலர் வேஷம் போடும் கபோதிகள் அவர்கள் சேர்த்த சொத்துகள் 

இனக்கலவரம் ஒன்று ஏற்படுமாயின் தீயிலே கருகி போகும் அதை பாதுகாப்பதுடன் 

தங்கள் கதிரைகளையும் பாதுகாக்க உரிமைகளை பேரம் பேசுகிறார்கள் !!

புதையல்களை பாதுகாக்கும் பூதங்க்கல் முரண்பட்ட அறிக்கைகள் மூலம் 

முஸ்லிம்களை குழப்பும் முஸ்லிம் காங்கிரஸ் !!பாராளுமன்றில் பள்ளிவாசல்கள் 

தாக்கப்படவில்லை என்று அறிக்கைவிடும் முஸ்லிம் அமைச்சர்கள் !!

அனுமதியற்ற ஹலால் சான்றிதழ் கொடுத்து முஸ்லிம்களை வம்பில் மாட்டிவிட்ட 

உலமாசபை நீதிமன்றம் வேண்டாம் விசாரணைகள் வேண்டாம் ஏற்றுமதிக்கு இலவசமாக

சான்றிதழ் தருகிறோம் எம்மீது கருணை காட்டுங்கள் என்று மன்றாடி கோத்தாவின் 

கருணை பார்வையில் ஊமையாகி விட்டார்கள் !!!

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன எமது சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள் சொத்துகள் 

தீகிரையாக்கப்பட்டன எங்கள் அவலக்குரல் அவர்கள் காதுகளுக்கு கேட்கவில்லை 

அதட்டலுக்கு அடிபணியும் அவலம் அரங்கேறுகிறது இந்த கொள்ளைக்காரர்களின் 

உறவினர்களும் பக்தர்களும் இவர்கள் குற்றத்தை மறைக்க களம் இறக்கப்பட்டு 

இணையத்தளங்களில் இவர்களுக்கு பூமாரி பொழிகிறார்கள் கூட்டிக்கொடுப்பும் 

காட்டிக்கொடுப்பும் குழி பரிப்பும் தொட்ர்கதையாகிப்போக எங்கள் கதறல் 

செவிடன் காது சங்காகியது !!!!

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* மகியங்கனை தாக்குதலும் மாட்டுத்தோலின் மர்மமும் !!



மகியங்கனை தாக்குதலும் மாட்டுத்தோலின் மர்மமும் !!

மகியங்கனை பள்ளிவாசலை ஒரு குழு திட்டமிட்டு தாக்கியது பின் பண்டியின் இறைச்சியையும் இரத்தத்தையும் மஸ்ஜித் உள்ளே கொட்டி முஸ்லிம்களை 

சீண்டியது எமது சமூகம் அமைதியாக எதிர்த்து ஒருவார்த்தை பேசாமல் நீதி அமைச்சை 

நாடினார்கள் வழமைபோல் எங்கள் காவலர்கள் சீறினார்கள் அறிக்கைகள் விட்டார்கள் 

பின் அமைதி அடைந்தார்கள் !!!இந்த சம்பவம் அவர்கள் எதர்பார்த்த பலனை அடையவில்லை அவர்கள் எதிர்பார்ப்பது சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை !!

அவர்கள் மேல் பட்ட கரையை அழிப்பதற்கும் இனக்கலவரத்தை இன்னுமொருவிதத்தில் 

பற்றவைக்க மேற்கொண்ட நாடகமே 

நேற்று மாலை ஹெம்மாதகம- கம்பளை பிரதான வீதியில் பலத்கமுவ என்ற கிராமத்தின் வீதியில் மாடு ஒன்றின் தோல் போடப்பட்டதாக தெரிவித்து பெரும் திரளானவர்கள் அந்த மாட்டு தோலை நடு வீதியில் போட்டு அந்த வீதியால் செல்லும் முஸ்லிம்களை இடைமறித்து மிக மோசமான முறையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக தூஷித்து கொண்டு இருந்துள்ளனர் . அவர்கள் மத்தியில் பெளத்த தேரர்களும் இருந்துள்ளனர் . இது சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது . அந்த வழியாக நானும் இரவு 8:30 மணியளவில் சென்றேன் என்னிடமும் அவர்கள் கூச்சல் போட்டார்கள். ஆனால் மாலை வேலையில் அந்த வழியாக வந்த முஸ்லிம்களை மிக மோசமாக தூஷித்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியாக முச்சக்கர வண்டியில் வந்த புர்கா அணிந்த பெண்ணும் அவரின் கணவரும் இடைமரிக்கப் பட்டு அவர்களை மிகவும் மோசமான தூஷித்துள்ளனர். இரவு பலத்கமுவ விகாரையில் இருந்து மாடுகளை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் ஊர்வலம் ஒன்றும் சென்றுள்ளது.

10M.ரிஸ்னி முஹம்மட்: ஹெம்மாதகம வாடியதென்ன கிராமத்தை சேர்ந்த மொஹமட் ஹம்ஷா, பௌமி மற்றும் அவர்களின் ஹட்டன் பகுதியை சேர்ந்த தமிழ் வாகன சாரதி ஆகியோர் பலத்கமுவ கிராமத்தில் வைத்து சிங்கள பெளத்த குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு மாவனல்லை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். !!

இந்த அவலம் தொடர்கதையாவதை அனுமதிக்க முடியாது ?

முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக நாங்கள் நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டம் 

நடாத்த வேண்டும் !!இன்னும் என்னசெய்யவேண்டும் உங்கள் கருத்துகளை 

பதியுங்கள் !!


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

* அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?


அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா..?

மகியங்கனைப் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ள துன்பியல் நிகழ்வானது ஒரு இனத்தின் மத உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

ஊவா மாகாண சபை காணி அமைச்சர் அனுர விதானகேயின் வேண்டுகோளையடுத்து பயத்தின் காரணமாக இன்று 19-07-2013 மகியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு மாகாண சபை அமைச்சரால் ஒரு பள்ளிவாசல் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்பது இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இச்செயற்பாட்டை வெறுமென கைகட்டி முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேடிக்கை பார்க்கப்போகின்றார்களா? 

முஸ்லிம் அமைச்சர்களால் இப்பள்ளிவாசலைத் திறக்க முடியாதா? இப்பள்ளிவாசலில் அச்சமின்றி இப்புனித ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட பாதுகாப்பு வழங்க முடியாதா? யாருக்காக நீங்கள் பதவி வகிக்கிறீர்கள்? உங்களது சுகபோக வாழ்கையை அனுபவிப்பதற்காகவா அல்லது மக்களின் பறிபோகும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா??

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை வீணே வம்புக்கு இழுக்கும் சமகால நடவடிவக்கைகள் போன்று முன்னொருபோதும் இந்நாட்டில் ஏற்பட்டதில்லை. முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளும் எதிர்ப்பு நடவடிக்கைளும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே உள்ளன. 

இந்நடவடிக்கைளை இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு இராஜதந்திர ரீதியில் தடுக்க ஏன் முன்வரக் கூடாது? உங்களை பாராளுமன்றதுக்கு அனுப்பி பட்டம் பதவிகளைப் பெறவைத்த மக்கள் வேதனைகளை வயிற்றில் சுமந்து கொண்டு வாழும்போது நீங்கள் வெறும் அறிக்கை விடும் மன்னர்களாக இருப்பதேன்..?

ஆளும் மற்றும் எதிர்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் . நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் என்ன செய்யப் போகிறீர்கள்..??

அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் என்று இருக்கப் போகின்றீர்களா? அல்லது இந்த சமூகம் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைக்கு தீர்வு காணப் போகிறீர்ளா? அல்லாஹ்காகவும் இந்த முஸ்லிம் சமூகத்தின எதிர்கால சந்திக்காகவுவும் மேற்கூறிய நபர்பளில் ஒருவராவது உங்களது ஒன்றுக்கும் உதவாத பதவியைத் துறப்பீர்களா..? அல்லது நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டின் அரசியல் சாசனத்தை மீறக் கூடிய, ஒரு இனத்தின் மத உரிமையை பறிக்கக் கூடிய திட்டமிட்ட, ஒருங்கிணைந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இச்சமூகத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்..? எதைச் செய்யப் போகிறீர்கள்..?

தேசத்துக்கும் சர்வதேசத்தும் இத்தகைய கீழ்தரமான நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் மதக் கடமைகளை எவ்வித அச்சமுமின்றி, எவ்வித இடையுறுகளுமின்றி மேற்கொள்ள குறைந்த பட்சம் எல்லோரும் ஒன்றினைந்தாவது தங்களது எதிர்ப்பைப் காட்ட முன்வருவீர்களா? மறுமையை அஞ்சுகள். மரணம் உங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள், கப்ரின் வேதனையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் மரணிக்கும்போது எதையும் கொண்டு செல்வதில்லை என்பதை சற்று உணருங்கள் உங்களிடம் ஒப்படைக்கபட்டுள்ள அமானிதப் பதவியைக் கொண்டு இச்சமூகதுக்காக எதைச் செய்திருக்கிறீர்கள்.?

சமூகம் உரிமையை இழந்து மதக் கடமைளை நிறைவேற்ற முடியாது தவிக்கும் ஒரு காலத்தில் நீங்கள் உங்களுக்குள் அரசியல் தலைமைத்துவப் போட்டிகளுக்காக சமூகத்தை கறிவேப்பிலைகளாக மாற்றிக்கொண்டிருக்கீறீர்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும் அதை மறந்து விடாதீர்கள். பறிபோகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பீர்களா? காலமும் இந்த சமூகமும் காத்துக்கிடக்கிறது உங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக....!


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

Wednesday, July 17, 2013

* அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா(க்களே)!!

உங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் நீங்கள் முட்டாள் தனமான முடிவுகளை திடீர் திடீரென்று எடுத்து அதை நடைமுறைப்படுத்தும்படி எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள்?

பாதுகாப்புச்செயலாளர், பொதுபலசென செயலாளர் கூப்பிடுவதற்கெல்லாம் ஓடோடிப்போய் கையை கட்டிக்கொண்டு அவர்கள் சொல்வதை அல்லது கட்டளையிடுவதை அப்படியே எங்களுக்கு கூறி அதன்படி நடக்கும்படி கூறுகிறீர்களே?? உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக படவில்லையா? இந்த உலமா சபை உங்கள் அமைப்பு இஸ்லாமிய அடிப்படையில் எத்தகு பெறுமதி வாய்ந்தது, கண்ணியமிக்கது என்பதை நீங்கள் உணரவில்லையா? மார்க்கத்தீர்ப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையிலும், நமது உயிரினிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் நபிகளாரின் போதனை, வழிகாட்டல்களின் அடிப்படையிலும் வழங்ககூடிய சக்திவாய்ந்த அமைப்பை அந்நிய ……மத்தியில் ஏன் இவ்வளவு கேவலமாக்குகிறீர்கள்? இந்த கண்ணியமிக்க சபைக்கு நீங்கள் தகுதியில்லை என்பதை (உங்கள் கோழைத்தனத்தாலும், ……………, அரசியல்தனத்தாலும்) பலதடவைகள் நிருபித்துவிட்டதால் அம்மேன்மைமிக்க சபையிலிருந்து நீங்கள் உடனே வெளியேறுங்கள்!! உங்களைவிட பன்மடங்கு மார்க்க அறிவும், உலகஅறிவும், தைரியமும், விவேகமும், தலைமைத்துவ ஆளுமையுமுள்ள பல உலமாக்களும், மார்க்க அறிஞர்களும், வெளியில் உங்கள் செயற்பாடுகளால் சலிப்படைந்தவர்களாக, ஆனால் ……………. மக்களிடம் உங்களை காட்டிக்கொடுக்க முடியாதவர்களாக உள்ளனர். எனவே இனியும் முட்டாள் அரசியல் செய்யாமல் ஒதுங்குங்கள்!!

இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை, இனியும் இல்லை என்றா நீங்கள் கருதுகிறீர்கள்? அதனாலேயா குனூத் ஓதவேண்டாம் என்று கூறுகிறீர்கள்? அல்லது அவர்கள் அவ்வாறு உங்களுக்கு ஏதும் (வெளியில் எதுவும் சொல்லவேண்டாம் என கூறி) உத்தரவாதம் தந்தார்களா? அப்படியாயின், அவர்களது ஏற்கனவே தரப்பட்ட எத்தனை உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டன? இவை ஒன்றும் உங்களுக்கு இதுவரை தெரியாதா? அல்லது அவர்கள் உங்களை பயமுறுத்தினார்களா? நீங்கள் பயந்துவிட்டீர்களா? அப்படியாயின் நீங்கள் விரும்பியபடி முடிவெடுக்கவோ, அவர்கள் முடிவெடுக்கவோ தற்போதுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளா??

நான், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: சிங்கள பௌத்தர்களுக்கு அஸ்கிரிய, மகாசங்க தேரர்கள் இருப்பதுபோல்தானே முஸ்லிம்களாகிய எங்களுக்கு உலமாக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் எப்போதாவது இந்த பாதுகாப்புச்செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ அவர்களை இவர்கள் காலடிக்கு அடிக்கடி அழைத்து அறிவுரை வழங்கியிருப்பார்களா?? மாறாக இந்த செயலாளரும், ஜனாதிபதியும்தானே அந்த தேரர்கள் காலடிக்கு சென்று அவர்களை (அடிமைகள்போல்) காலைத்தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்று, அவர்களின் அறிவுரைகளை தங்கள் சட்டங்களாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வாறு “மதத்தை” கொண்ட அவர்களுக்கு அவ்வளவு கௌரவம் என்றால் “மார்க்கத்தை” கொண்ட எங்களுக்கு எவ்வளவு கண்ணியம் கிடைக்கவேண்டும்??

நான் நினைக்கிறேன், நீங்கள் எப்போது அவர்களுக்காக தெருவுக்கும், ஜெனிவாவுக்கும் ( …………..) சென்றீர்களோ அன்றே அவர்கள் உங்கள் இல்லை இந்த கண்ணியமிக்க உலமா சபையை வெறும் காற்பந்தாக இனங்கண்டுவிட்டார்கள். இதற்கு நீங்கள் நிச்சயம், பதில் சொல்லியாகவேண்டும்.

இது எனது குரல் அல்லது ஏக்கம் மட்டுமோ இல்லை, மாறாக அனைத்து, அல்லது மிகமிக அதிகமான முஸ்லிம்களின் குரலாகவும் ஏக்கமாகவுமே நான் கருதுகிறேன். இதை படிக்கும் சகோதர சகோதரிகள் தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem