Saturday, February 8, 2014

* இலங்கை முஸ்லிம் சமூகத்தை கோமாளிகளாக ஆக்க முனையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முல்லா றிஸ்வியும்.


இலங்கை முஸ்லிம் சமூகத்தை கோமாளிகளாக ஆக்க முனையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முல்லா றிஸ்வியும்.



தம்புள்ளை பள்ளிவாயிலை முற்றுகையிற்று உடைக்க முற்பட்ட பொழுது ஜம்மியதுல் உலமாவின் தலைவர் முப்தி றிஸ்வி தனது வெற்று வீராப்பு வார்தைகளாள் முழங்கியதை இலங்கை முஸ்லிம்கள் மறந்திறுக்கமாட்டார்கள். 

தெஹிவளை பள்ளி வாசளில் இவர் ஆற்றிய உரை (ஹலாலை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுக்மாட்டோம் ஹலாலை விட்டுக்கொடுத்தால் நாளை தம்புள்ளை பள்ளியை விட்டுக்கொடுக்க வேண்டிவரும்) என்று கூறிய முப்தி பின்னர் முழு முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து நடு ரோட்டில் விட்டுவிட்டு சம்மான் கோட்டை பள்ளியின் மிம்பரில் இருந்து கண்ணீர்வடித்து முழு முஸ்லிம் சமூகத்தையும் ஏமாற்றி அரங்கேற்றிய நாடகத்தினையும் இந்த நாட்டின் மக்கள் மறந்திறுக்க முடியாது.

தனது ஹலாலை விற்பனை செய்யும் வியாபாரத்திற்காக முழங்கிய உலமாவின் தலைவர் றிஸ்வி அன்மையில் மீண்டும் ஒரு ஹலால் கம்பனியை தமது வருமானத்திற்காக உருவாக்கி இருக்கின்றார். இந்த நாட்;டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சாரோடு இனைந்து எமது நாட்டின் பொருட்களை சர்வதேச சந்தையில் ஹலாலாக விற்பனை செய்ய பல்தேசி கம்பனிகளுக்கு எமது முஸ்லிம்களை பகடைக்காய்கலாக பாவித்திருக்கிறார். .

மறுபுறம் இந்த நாட்டில் அடுக்கடுக்காய் பள்ளிகள்; உடைக்கப்பட்;டுக்;கொண்டுடிருக்கிறது. நாளுக்கு நாள் முஸ்லிம சமூகத்துக்கு எதிரான பௌத்த இனவாதம் வளர்ச்சி கண்டாலும் எமது முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டாலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் துற்போது செல்லாக்காசாகியிருக்கின்ற ஜம்மியதுல் உலமா ஒன்றும் செய்ய முன்வராது என்பதினை இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முல்லா றிஸ்வியும் உலமாக்கள் சபையும் ஒன்றும் செய்யாவிட்டாழும் பரவாயில்லை முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கும் ஈனச்செயலை செய்யாமல் இருந்தாலே போதும். இந்த நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக அக்குரனையில் இருக்கின்ற எமது சில சகோதரர்கள் ஆயுதம் தாங்கி போராட முன் வரவில்லை. அவர்கள் இந்த அதி உயர் அதிகார முடைய நீதி மன்றத்தில் நீதி கேட்கச் சென்றார்கள். இவர்களது இந்த முயற்சியை முடக்குவதற்கு சமரசம் என்கின்ற பெயரில் காட்டிக்கொடுக்கும் முழு முஸ்லிம் சமூகத்தையும் இழிவு படுத்தும் ஈனச்செயலை துரோகத்தை இந்த யுஊதுரு செய்திருக்கின்றது. இதன் பின் இவ்வாறான செயல்கள் இடம் பெறாது என்றும் இவர்களுடைய இந்த சமரச உடன் படிக்கையாகிய தூரோக உடன்படிக்கையில் இடம் பெற்று 24 மனினேரம் செல்லு முன்னர் மற்று மொறு பள்ளிவாசல் ஹெம்மாத்தகமையில் பௌத்தத இனவாத அடிப்படை வாதிகளால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றது. இப்பொழுது இந்த உலமா சபை என்ன சொல்லப்போகிறது. மீண்டும் நீதி கேட்கத் தயாராகாமல்; சமரச உடன் படிக்கையா ?

நாம் இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எமது சமூகத்தை தூண்ட முட்படவில்லை. சட்டத்தை நாம் கையில் எடுக்க முட்படவும் இல்லை. அடிப்படை வாதத்தை அடிப்படை வாதத்தால் அடக்கவும் சொல்வவில்லை. நாட்டின் இறைமைக்கு கட்டுப்பட்டு நீதி கேட்கச் சென்ற சகோதர்ளின் உணர்வுகளை அடக்கி பனியவைத்து பாதுப்பபுச்செயலாளர் கோட்டாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய முல்லா றிஸ்வியையும் அவரது கூலிப்படைகளையும் இந்த நாட்டின் அறிவுள்ள முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மன்னிகாது.

முஸ்லிம் சமூகம் சட்ட நடவடிக்கை எடுக்க நீதி மன்றத்தை நாடும் போதெல்லாம் எமது உணர்வுளையும் உரிமைகளையும் கூட மதிக்காது காசுக்காகவும் பதவிகளுக்காகவும் பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட சம்பவங்கள் எமது சமூகத்திற்கு புதிதல்ல.
2001 ஆண்டு பதுளை சரஸ்வதி வித்யாலயத்தில் முஸ்லிம் மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பர்தா அனிவதை தடுத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை பாயிஸ் முஸ்தபா எனும் சட்டத்தரணி தனது மகனின் அரசியல் பிரவேசத்திற்காக ஆறுமுகம் தொண்டமானிடம் விளை போகி முழு முஸ்லிம் சமூகத்தின் உரிமையையும் இல்லாமல் ஆக்கச் செய்வதற்காக வழக்கினை வாபஸ் பெற்ற சம்பவத்தையும் இந்த நாட்டு மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

அன்மையில் முஸ்லிம் கவுன்சில்;இ ஒரு சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் என்கின்ற சாராரும் சகோதரர் அஷ;ரப் அவர்களது இல்லத்தில்; ஒன்று கூடினார்கள். இதில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெறும் பௌத்த அடிப்படை வாதத்திற்கெதிராக சட்டநடிவடிக்கை எடுப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டம் தான் உலக வரலாற்றில சட்ட நடவடிக்ககை எடுப்பதற்கான கலந்தாலோசனை செய்யப்பட்ட கூட்டங்களில்;; முதன் முதல் இவ்வளவு விளம்பரப்படுத்தப்பட்ட கூட்டம். இக் கூட்டத்திற்கு பிறகும் அதன் முடிவுகளையும் அறிக்கைகளையும் அதில் கலந்து கொண்டவர்களையும் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட கூட்டம். இதில் இருந்தே இதன் நம்பகத்தன்மை எமக்கு தெளிவாகின்றது.

இலங்கையின் முன்னனி சட்டத்தரணிகள் முஸ்லிமகளாக இருக்கின்றார்கள். ஏராளமான ஜனாதிபதி சட்;டத்தரணிகள் காணப்படுகின்றார்கள.; ஏன் இந்த நாட்டில் நீதி அமைச்சர் கூட ஓரு முஸ்லிமாக இருக்கின்றார். சட்டமியற்றும் சட்டசபையில்; 20 அதிகாமான முஸ்லிம் சமூகத்தை விலை பேசி ஏலம் போடும் துரோகிகள் எனும் உறுப்பினர்களும் அமைச்சாகளும் இருக்கவே செய்கின்றார்கள.;

இருந்தும் என்ன பயன்...................?
கேட்பதற்கு நாதியில்லாத சமூகம் நாம்.
யாருமே எமக்கு உதவிக்கு வரத்தயாராகாத சமூம் நாம்.

தனது சமூத்தையே சுயநலன்களுக்காக காட்டிக்கொடுத்து வயிறு பிளைக்கும் தூரோகிகள் எம்மத்தியில் இருக்கும் வரை நாம் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment