Saturday, February 8, 2014

* ஜம்மியத்துல் உலமாவின் கட்ட பஞ்சாயத்து ?!!



கண்டி- அம்பதென்னை மஸ்ஜித் தாக்குதல் விவகாரம் சமாதானமாக தீர்ப்பு!!!!

கண்டி- அம்பதென்னை மஸ்ஜிதுல் பலாஹ் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கண்டி நீதி மன்றம் முன் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குதற்கும் இது சம்பந்தமான வளக்கை வாபஸ் வாங்குவதற்கும் முஸ்லிம் , பெளத்த தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தீர்க்கப்படாத வழக்கை தீர்த்துவைத்த
பெருமை வாழ்க உங்கள் சேவை
இன்னும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன அங்கே கொண்டுபோய் இறக்குங்கள் உங்கள் கமொண்டோக்களை உலமாக்களே மறந்துவிடாதீர்கள் இவை பொதுபல சேனாக்க லுக்கு எதிரான வழக்குகள்
ஆகவே மற்றைய பிரச்சினைகளை யும் முன்னின்று தீர்த்துவையுங்கள்
இதோ இவர்களின் பஞ்சாயத்து !!

இக் கூட்டத்தில் பௌத்த மக்கள் சார்பில் கொண்டதெனியே பியதஸ்ஸீ தேரர், படுகொட சங்கிச்சாயன தேரர்,: இராஜாங்கனை சோரத தேரர், முல்லேகம பியரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்கள் சார்பில் கண்டி நகர ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி பஸ்லுல் றஹ்மான், அக்குறணை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர் மௌலவி முஸம்மில், அககுறணை அஸ்னா மத்திய பள்ளியின் நிர்வாக சபையின் தலைவர் சட்டத்தரனி அஸ்மி பாரூக், உற்பட பலர் கலந்து கொண்டனர்.

முல்லேகம் பிரியதர்ஷனாராம விஹாரையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் பள்ளி வாயலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதென முஸ்லிம் தரப்பினர் அறிவித்தனர்.

தெவனகல தெகிவல அக்குரணை மகியங்கனை எல்லா வழக்குகளையும் அச்சுருத்திவாபாஸ் வாங்க வைக்கும் கொடுமை இலங்கையில் அரங்கேறுகிறது ஜம்மியத்துல் உலமா துணைபோகிறது ?????
இல்லாவிட்டால் சட்ட விரோத ஹலால் முத்திரை வழக்கு அவர்கள் மீது போடப்படும் என்ற அச்சுறுத்தலா ?
முஸ்லிம்கள் மத்தியில் இந்த கேள்விகள் எழாமல் இல்லை இவற்றுக்கு பதில் சொல்லுங்கள் அதேநேரம் பலசெனாக்கலுக்கு எதிராக புத்தி ஜீவிகள் வழக்கு போடா உள்ளார்கள் அதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை குழப்பிவிடாதீர்கள்


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment