Saturday, February 8, 2014

* பீஸாவை பிடுங்கிவிட்டு பரோட்டாவா? பானா? வேண்டும் என்றால்...........


பீஸாவை பிடுங்கிவிட்டு பரோட்டாவா? பானா? வேண்டும் என்றால்...........


இலங்கையில் பள்ளிவாயல்கள் தாக்கப்படும்போதெல்லாம் அதற்காக குரல் கொடுக்கின்றவர்களை கொள்கை பேதம் பார்த்து நீ உதவி செய்ய வரத்தேவை இல்லை என்று பள்ளி நிர்வாகமும் ஜமய்யதுள் உலமாவும் கூறி கூறுவபோடுவதில் இருந்து சில அவதானங்களை பெற முடிந்தது.

இலங்கையில் ஹலால் பிரச்சினை தனக்கெதிராக வரும்போது மக்கள் தேவை பட்டது.

பிறை பிரச்சினையில் பிறைகண்டு அதன் அடிப்படையில் நோன்பு நோற்றவர்களால் தனது மானம் போகும் என்று அவர்கள் குழப்பவாதிகள் எனப்பட்டது.

தம்புள்ள பள்ளிவாயலை சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கப்பட்டு தாரைவார்க்கபட்டது.

மோலவத்த பள்ளியிலும் அதே அரசியல் பேணப்பட்டு சத்தியம் நொறுக்கப்பட்டது.

இலங்கையில் இனிமேல் எந்த பள்ளிவாயல் தகர்க்கபட்டாலும் அதற்கு தீர்வு சொல்வது நிச்சயமாக அரசாங்கமாகவே இருக்கும்.அந்த தீர்வு ஜமிய்யதுள் உலமாவால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கும்.

காரணம் தம்புள்ள பள்ளி முதல் ஹலால் புலாலில் இருந்து க்றேன்பாஸ் பள்ளிவரை ஒரேவிதமான அணுகுமுறையை ஜமிய்யதுள் உலமா பேணுகிறது.

முஸ்லிம்கள் மீது அத்துமீருகின்றவர்கள் நல்லதொரு பாடத்தை கற்றுக்கொண்டனர்.முஸ்லிம்களிடம் இருந்து பீஸாவை பிடுங்கிவிட்டு பரோட்டாவா? பானா? வேண்டும் என்றால் ரெண்டில் ஒன்றை வாங்கிவிட்டு போய்கொண்டே இருப்பர்கள்.

இனிமேல் எந்த பள்ளியை இனவாதிகள் தாக்கினாலும் அரசாங்கம் எந்தவித பிரச்சினையும் இன்றி இலகுவான முடிவை எடுக்கும்.

தானே பிரச்சினையை தீர்ததுபோலும் தனது திட்டம் நிறைவேரியதுமன மகிழ்ச்சியில் அரசாங்கம் அடுத்த தேர்தலில் முஸ்லிம்கள் வாக்குகளில் அரசை அமைக்கும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem



No comments:

Post a Comment