Saturday, February 8, 2014

* கேள்விகளினதும் கருத்துக்களினதும் நாயகன்


முஸ்லிம்களுக்கு ஏதிராக புலிகளின் குற்றங்களுக்கு ஜெனிவாவில் பிரேரனை கொண்டு வரவேண்டும் என்று முழங்கும் அஸ்வர்.

கேள்விகளினதும் கருத்துக்களினதும் நாயகன்


விடுதலைப்புலிகளுக்கு நாம் பயங்கரவாதிகள் / Terrorist என்றெல்லாம் பல வார்தைதைப்பிரயோகங்களை பாவிக்கின்றோம். ஏன் என்றால் அவர்கள் செய்த அநியாயங்களுக்கும் அக்கிரமங்களும் சட்டரீதியான அங்கிகாரம் இல்லை.

அவர்களுடைய உரிமைப்போராட்டம் தவறான வழிமுறையும் கூட என்பதால் தான். அதே போல் ஒரு நாட்டின் இரானுவத்திற்கு நாம் பயங்கரவாதிகள் என்றோ Terrorist என்றோ சொல்வதில்லை.

ஆனால் ஒரு நாட்டின் இராணுவம் இவ்வாறான கீழ்தரமான அநியாயங்களையும் மணிதப்படுகொலைகளையும் அப்பாவி பொதுமக்களையும் கொண்றொழித்தால். அதற்கு அந்த நாடுதான் பொறுப்புக் கூற வேண்டும்.

அந்த நாட்டின் இராணுவம் நாட்டின் சட்டதிட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டது. இவர்கள் யுத்த விதி முறைகளை மீறி அப்பாவி பொதுமக்களை கொண்றொழித்ததை அந்த நாடு மூடி மறைக்க முற்பட்டால் அந்த நாட்டில் சட்டம் நடை முறையில் இல்லை அந்த நாட்டில் நீதி நிலை நாட்டப்படவில்லை எனவே பாதிக்கப்பட்டவர்கள் யாரை நாடுவது.?

நாளுக்கு நாள் மக்கள் காணாமல் போகிறார்கள் கடத்தப்படுகிறார்கள் கொலை செய்யப்படுகிறார்கள் வெள்ளை வேண் கலாச்சாரம் நிலவுகிறது. பய அச்ச சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதிலலை இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பிடம் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப நியாயம் கேட்பது ஏந்த வகையில் அது பிழையாகும்.

1980 களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட அப்போது இந்த நாட்டில் இருந்த அரசாங்கத்திற்கு ஏதிராக ஜெனிவாவிற்குசென்றதையும் இந்த நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பயங்கரவாதிகளால் 1990ல் வடபகுதியில் இரவோடு இரவாக விரட்டப்பட்ட அப்பாவி முஸ்லிகளை 24 வருடங்கள் அவர்களை மீளக்குடியமர்த்தாமல் அஹதி முகாம்களில் வைத்திருந்த கொடுமைக்காக 1994ல் இருந்து ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்த்திற்கு எதிராக ஜெனிவாவில் ஆணைக்குழு அமைக்க இந்த அஸ்வர் குறல் கொடுப்பாறா?

கிழக்கில் முஸ்லிம்களை பள்ளிவாயில்களில் தொழுது கொண்டு இருக்கும் போது படுகொலை செய்த கருணா அம்மானுக்கும், பிள்ளையானுக்கும் இலங்கையில் நீதித்துறையால் நடவடிக்கை ஏடுக்க விசாரனை கமிசன் அமைக்குமாறு அஸ்வர் பரிந்துறை செய்வாரா?

அடுக்கடுக்காய் பள்ளிகள் உடைக்கப்படுவதற்கு எதிராக இந்த நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதையிட்டு சர்வேதச விசாரனை கமிசன் அமைக்க அஸ்வர் ஜெனிவா செல்வாறா?

கேள்விகளினதும் கருத்துக்களினதும் நாயகன்

                                                     

                                                        நான் பார்க்கும் உலகம்
                                                      ★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
                                                                            www.fb.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment