Saturday, February 8, 2014

* நிர்பந்தங்களுக்கு அடிபணியும் ஜம்மியத்துல் உலமா ?சிக்கித்தவிக்கும் முஸ்லிம் சமூகம்


இஸ்லாத்துக்கு வருவதாக அரங்கேற்ற பட்டநாடகம் ?
தேரர்களின் காய் நகர்த்தல் ?
சிக்கிக்கொள்ளும் முஸ்லிம் சமூகம் !!!
பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்க சென்ற சிங்கள பெண் !

அதேவேளை நேற்று குருநாகல் மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து வருவதாக தெரிவித்து இரு சிங்கள பெண்கள் எமது பள்ளிக்கு வந்தனர் அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார் . இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தோம் அவர்கள் அவர்களை விசாரித்தார்கள் . அதன் பின்னர் அது பற்றிய அறிய முடியவில்லை . நேற்றைய இந்த சம்பவத்தையும் மற்றைய சம்பவ பின்னணியுடன் பார்த்தோம் அதன்காரணமாக பொலிசாருக்கு அறிவித்தோம் .

இது தொடர்பாக விமர்சங்கள் எழுத்துள்ளது , இஸ்லாத்தை ஏற்றுகொள்ள போவதாக வந்தவர்களின் உள்ளங்களை நாம் திறந்து பார்க்க முடியாது அவர்கள் உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் நோக்கில் வந்திருக்கலாம் என்றும் இல்லை அவர்கள் எம்மை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்றும் இரு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளது .இது வரை மேற்படி சம்பவங்கள் நடந்து முடித்துள்ளது .
அவளை பின்தொடர்ந்து ஊர்வலம் வந்த தேரர்கள் 
லை ஹெம்மாதகம பிரதேசத்தின் பெரிய பள்ளி வாசலுக்கு சென்ற பெளத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் . குறித்த மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்து மஸ்ஜித் நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று தெரிவித்து அங்கு சென்றுள்ளனர் .
அங்கு ஜமாத்தில் வந்து மஸ்ஜித்தில் தங்கியருந்த மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று கூறியுள்ளனர் அங்கிருந்த மாணவர்களும் வந்த பெளத்த தேரர்களை கதிரைகளை போட்டு அமரச்செய்துள்ளனர் . இதற்கு இடையில் குறித்த குழுவினர் பள்ளிக்கு வந்திருக்கும் தகவல் பொலிசாருக்கும் , பிரதேச அரசியல்வாதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது , பள்ளி நிர்வாகமும் அங்கு செல்ல எஸ் .பி தலைமயிலான பொலிசாரும் அங்கு வந்து விட்டனர். பிரதேசத்தின் முஸ்லிம் வாலிபர்களும் கூடிவிட்டனர் .

வந்தவர்களுடன் நாம் பேசினோம் , அவர்களை மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருக்கும் மண்டபம் ஒன்றுக்கு அழைத்தோம் அவர்கள் வந்தன் நோக்கம் இந்த பகுதியில் தமது மேலாதிக்கத்தை காட்டும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் ஆனாலும் அவர்களை நாம் கண்ணியமாக நடாத்தினோம் , அதிகாமான முஸ்லிம் வாலிபர்களும் மஸ்ஜிதில் கூடிவிட்டனர் .

வந்தவர்கள் எமது மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பொலிசார் தலையிட்டு அவர்களை நாளை காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறும் அங்கு இது தொடர்பாக் பேசலாம் என்றும் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர் .
அடுத்த நாள் காலை அவர்கள் பொலிஸ் நிலையம் சென்று பேசியுள்ளனர் . அவர்களின் குற்றச்சாட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டது.என்பது தெரியவருகிறது . இந்த பள்ளியில் எவரையும் நாங்கள் ( பலவந்தமாக ,பொருட்கள் மீது ஆசை காட்டி ) இஸ்லாத்துக்கு எடுக்க வில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளோம் .

வந்த பெளத்த பிக்குவில் ஒருவர் தெவனகல சம்பவத்துடன் தொடர்பான பிக்கு , இருந்தும் நாம் கண்ணியமாக நடந்து கொண்டோம் . பொலிசார் உடனடியாக இடத்துக்கு வந்தனர் நியாயமாக நடந்து கொண்டனர்.
ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ளுங்கள் திட்டமிட்ட காய்நகர்த்தல் கண்டி- அம்பதென்னை மஸ்ஜித் தாக்குதல் விவகாரம் சமாதானமாக தீர்வு
சமாதானமாக பேசி போடப்பட்ட வழக்கை வாபாஸ் வாங்கியது இதுநடந்து மறுநாள் அட்டகாசத்தை ஆரம்பித்தார்கள் அங்கு அவர்களின் வாக்குறுதி இரு சாராரும் ஏற்றுக் கொண்டவாரு இச் சம்பவத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வறவும் இதண் பின் இவ்வாரான செயல்கள் இடம் பெறாதிருப்பதற்கு தேவையான நடவக்கைளை மேற்கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த கட்ட பஞ்சாயத்தை முன்னின்று நடாத்திய ஜம்மியத்துல் உலமாக்கள் எல்லாவற்றையும் பொறுப்பெடுக்க வேண்டும் இவர்களுக்கு காவடி தூக்கும் அடிவருடிகள் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கவில்லை நீதியை நாடி நீதி மன்றம் சென்றார்கள் அதை முன்னின்று இல்லாமல் செய்த சக்தி எது விடைகான முடியாத வினா உங்களிடமே விட்டு விடுகிறோம்


நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.fb.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment