Saturday, May 24, 2014

* 30 வருட யுத்தத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும்.


30 வருட யுத்தத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும். 



இந்த நாட்டில் இருந்த 30வருட கொடிய யுத்தத்தை வெற்றி கொள்வதில் முஸ்லிம்களது பங்களிப்பு என்ன? வெருமனே 8 % வாழும் முஸ்லிம்கள் 3,500 முஸ்லிம் இரானுவ வீரர்களை இந்த யுத்தத்தில் இழந்து ஏமது தாய் நாட்டிற்காக முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பபை செய்திருக்கிறார்கள். என்பதை இந்த நாட்டு மக்கள் மறந்து விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். 

உலகில் எந்த ஒரு சமூகமும் அனுபவத்திராத துன்பத்தை இலங்கையில் எமது முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் அனுபவித்தார்கள். சுமார் ஓரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 23 வருடகாலமாக தனது சொந்த பூமியை இலந்து அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம், இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிளேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அவல நிலை. இன்று யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்த பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன. 

இந்த நாடு சந்தித்த மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாக்கிஸ்தான, ஈரான்; போன்ற நாடுகள் நேரடியாகவும் மறை முகமாகவும் உதவி செய்து யுத்தத்திற்கு பாரிய பங்களிப்பை இலங்கை அரசிற்கு செய்த உதவியை யாரும் மறந்திருக்க முடியாது. 

1994ம் ஆண்டு இலங்கை ஓரு பாதுகாப்பற்ற நாடு என்று கூறி கிரிகட் உலககோப்பபையை இலங்கையில் விளையாட நாடுகள் மறுக்கும் சமையத்தில் பாக்கிஸ்தான் இந்த நாட்டுக்கு தனது கிரிக்கட் அணியை இலங்கைக்கு அனுப்பி, சர்வதேச உலகிற்கு இலங்கை ஓரு பாதுகாப்பான நாடு என்பதை உணர்த்தச் செய்த உதவியை இந்த நாட்டு மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். 

சவுதி அரேபியா, குவைட், கட்டார், பேன்ற நாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. சவுதி அரேபியா வழங்கிய பாரிய வீடமைப்புத் திட்டம், அத்தோடு ஈரான் கோடிக்கணக்காண அமெரிக்க டலர் பெருமதியான உமா ஓய நீர் திட்டம், சபுகஸ்கந்தை என்னை சுத்திகரிப்புத்திட்ம், மற்றும் நீண்டகால கடன்திட்டத்தில் எமது நாட்டிற்கு மசகு எண்ணை வழங்கி உதவுவதையும் யாரும் மறந்திருக்க முடியாது இந்த முஸ்லிம் நாடுகளின் உதவிகளை. 

ஜெனிவாவில் எமது நாட்டுக்கு முஸ்லிம் நாடுகள் செய்த உதவிகளை ஒரு போதும் யாரும் மறக்கவும் மாட்டார்கள். 

ஆனால் இப்படி ஏல்லாம் இந்த நாட்டுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக இருக்கும் போதும் ஏன் இந்த நாட்டு மக்களுக்கு எம்மைப்பற்றிய அச்சம்.? ஏன் எம்மை ஓரு பயங்கரவாதியக நோக்குகிறார்கள்? என் எம்மை ஒரு அடிப்படை வாதிகளாக பார்க்கின்றார்கள்?.

கசப்பான மற்றும் சில உண்மைகளையும் நாம் இங்கு பேசித்தான் ஆக வேண்டும். 

இன்று இந்த நாட்டு முஸ்லீம்கள் அரசியல் தொடக்கம் -
பாதால உலகம் வரை வியாபித்து இருகிர்கள். 

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நாட்டில் வியாபாரிகளாக அறிமுகமாகிய முஸ்லீம்கள் வர்தக வானிப துறைகளில் பெயர் பதித்து சிறந்து விளங்கினார்கள் முஸ்லிம் வியாபாரிகள் என்றால் நன் மதிப்பும் மரியாதையும் இருந்தது.

காலப்போக்கில் முஸ்லிம்களது நடத்தையில் பாரிய மாற்றங்கள் அதாவது, விரைவாக பணத்தைக் குவிக்கும் ஆசையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கினர், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி செயல்களில் எமது முஸ்லிம்கள் சமபந்தப்பட்டிருக்கிறார்கள், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய கொலைச்சம்பவத்தில்; முஸ்லிமகளுக்கும் தொடர்பு இருக்கின்றது, மற்றும் கள்ளக் கடத்தல், பாதாள உலகத் தொடர்பு, பாதாள உலகின் முக்கிய நபர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள். போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் கூடிய ஈடுபாடு…. 

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு கௌரவமும் அந்தஸ்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் அன்னிய சமூகங்கள் மத்தியில் இருந்தன.

ஆனால் இன்று அரசியல் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் ஒன்றுசேர அவர்களது நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியலைக் கொண்டு நடத்த குண்டர் படைகள், தனது அரசியல் நலன்களுக்காக தனது சமூகத்தையே ஏலம் போடும் அரசியல் கோமாளிகள், இவர்களை எமது சமூகத்தின் தலைமைகலாக ஏண்ணும் காலமெல்லாம் நாம் இந்த நாட்டில் அரசியல் அநாதைகலாக்கப்படுவோம், இது மட்டுமல்லாது ஏனைய சமூகங்கள் எம்மை எதிரியாகவே பார்க்க முற்படும்.

நான் பார்க்கும் உலகம்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanParkumUlagam

No comments:

Post a Comment