Saturday, June 15, 2013

* தம்புள்ளை மஸ்ஜிதும் ஹில்மிகரீமும் !!!


தம்புள்ளை மஸ்ஜிதும் ஹில்மிகரீமும் !!!


மதிப்புக்குரிய நகரபிதா ஹில்மிகரீம் அவர்களே நான் மாத்தளை யை சேர்ந்தவன் நீங்கள் கூரு கிறீர்கள் 
மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் அமைந்திருப்பதால் அதன் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்குண்டு. இந்த வகையில் ஜனாதிபதி மாத்தளை அரசாங்க அதிபர், மற்றும்நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி நல்லதோர் தீர்னவினை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இதற்கு பள்ளிவாசல் நிர்வாக சபை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று !!!
சற்று சிந்தித்துபாருங்கள் மதிப்புக்குரிய ஜானக தென்னகோன் ஜனாதிபதியோடு தர்க்கம் புரிகிறார் எங்கள் உரிமைக்காக
நீங்களோ போதுபெரமுனவில் வெத்திலை சின்னத்தில் போட்டியிட்டவர் சமூகம் தந்த பொன்னான வாக்குகளை பெற்று
மேயர் ஆனீர் அரசுக்கு விசுவாசமாக எங்கள் உரிமையை பறித்து கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சோனகனாக
இருந்துக்கொண்டு குழிவெட்டும் உம்மைவிட சிங்கள சமூகத்தை சேர்ந்த ஜானக தென்னகோன் எவ்வளவோ மேல் !!!!!!
அன்று பள்ளிவாசல் தாக்கப்பட்டவேளை நீங்கள் என்னநடவடிக்கை எடுத்தீர்கள் ?!!!
அடுத்தநாள் ஹிஸ்புல்லாவுடன் விஜயம் செய்து பள்ளிவாசல் தாக்கப்படவில்லை என்று அறிக்கை விட்டீர் !!!!!!!!
எவ்வளவு கபடத்தனம் !!!உங்களைபோன்ற சமூகத்தை காட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கு எப்படி பள்ளிவாசல் நிர்வாக சபை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று !!எதிர்பார்க்கிறீர் தயவுசெய்து இந்தவிடயத்தில் உங்கள் பெரிய தலையை நுழைத்து
உள்ளதையும் இல்லாமல் ஆக்கிவிடவேண்டாம் உங்களால் பள்ளிவாசல் பறிபோனால் மாத்தளை முஸ்லிம்
இளையோர் முதியோர் தாய்மார்கள் சகோதரிகள் எல்லோரும் வீதிக்குவந்து உமது செய்கைக்கு எதிராக போராடுவோம்
தோல பிடி ஆதரவை நீங்கள் இழக்கவேண்டி ஏற்படும்? !!

இம்ரான் நாசர் மாத்தளை

No comments:

Post a Comment