Wednesday, June 26, 2013

* சஹ்பான் மாதம் தன்சல் அன்னதானத்தை !!!!! பிரமதச்சடங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் ஆக்கியதா ஜம்மியத்துல் உலமா ?!!!!


சஹ்பான் மாதம் தன்சல் அன்னதானத்தை !!!!!
பிரமதச்சடங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் ஆக்கியதா 
ஜம்மியத்துல் உலமா ?!!!!


நன்மைகள் உயர்த்தப்படும் மாதம் பட்டோலைகள் மாற்றப்படும் மாதம் 
ஹலாலான ஹராம் !!!!
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புத்தளம் மத்திய சந்தை முஸ்லிம் வியாபாரிகளால் பகல் அன்னதானம் (தண்சல்) வழங்கப்பட்டது.

ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனையின் நிமித்தம் இந்த நிகழ்வுகள் ?!!!!!!

ஒருஹராமான சம்பவம் இடம்பெறும்போது அந்த சம்பவத்தை தட்டிக்கேற்பதற்கும்
அது பிழை என்று அறிக்கை விடுவதற்கும் நபிவாரிசுகளுக்கு பணம் கொடுக்க
வேண்டுமா இவர்கள் செய்தது பிழை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை
என்று அறிக்கை விடுவார்களா ?!! ஜம்மியத்துல் உலமா வின் கடமை என்ன ?!!
சென்ற வருட உல்ஹியா நாட்களை மாற்றி அமைத்தார்கள் கொத்துபா மேடையை
அரசியல் மேடையாக்கினார்கள் !!இன்று காணாமல் போய்விட்டார்கள் !!!!அதுமட்டுமா
கோத்தாபய ராஜபக்ஸ ஜம்மியாவின் நிழல் தலைவர் போன்றுள்ளது ?!!!!
Zubair Mohamed ஸஹீஹுல் புகாரி 7049.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
Faiyaz Fahim அல்லாஹ்வின் ரசூலுக்கு கூட அதிகாரம் இல்லாத விடயங்களில் தலை இடாதீர்கள். அல்லாஹ்வின் பிடி கடுமையானது! அல்லாஹ் எல்லா ஆபாதுக்களில் இருந்தும் நம் ஊரை காப்பாற்றி இருக்கின்றான். வானத்தில் போகின்ற முசிபத்துக்களை ஏணி வைத்து இறக்கிவிடதீர்கள்!

17:74. (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

75. அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.
Zubair Mohamed ஸஹீஹுல் புகாரி 14. '

என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:1,Book:2
Zubair Mohamed ஸஹீஹுல் புகாரி 7049.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் 'அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், 'இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று கூறுவான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume:7,Book:92
Mohamed Hashmath இஸ்லாத்திற்காக எதனையும் விட்டுக்கொடுக்கலாம், ஆனால் எதற்காகவும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க முடியாது, இது தான் ரஸூலுல்லாவினதும் ஸஹாபாக்களினதும் நாம் கானக்கூடிய உன்மை.

ஜம் இய்யதுல் உலமா இதற்கு வழிகாட்டியது என்றால் அச்சரியமில்ல, ஏனென்றால் முஸ்லீம்களுக்காக என்று ஆரம்பித்த ஹலாலை பேரினவாதிகளுக்காக் விட்டுக்கொடுத்த போது இது ஒன்றும் பெரிதல்ல. என்றாலும் "ஹலாலை விட்டால் இன்னும் நிறைய விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டிவரும்" என ஜம் இய்யாவின் தலைவரே கூறியது ஞாபகப் படுத்தத் தக்கது. இதுவும் அவ்வாறான விட்டுக்கொடுப்புத் தான்.

அன்னியக் கலாச்சாரத்தை பின்பற்ற இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? இன்று இதைச் செய்தவர்கள் நாளை போதி பூஜாவுக்கும் செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்...?
முஸ்லிம் சமூகமே தட்டிக்கேற்க வேண்டியவர்கள் தட்டிக்கொடுப்பார்கள் அவர்களை பின்பற்றாது குரான் ஹதீசை
பின்பற்றவும்
நான்பார்க்கும் உலகம்

No comments:

Post a Comment