Monday, June 10, 2013

* மாடும்:இறைச்சியும்:நாமும்:சில உண்மைகளும்


மாடும்:இறைச்சியும்:நாமும்:சில உண்மைகளும்


இலங்கையில் இன்று பிராணிகள் உயிர்வதை அல்லது அதனை விட மாடு அறுத்தல் சம்பந்தமான பிரச்சினையும், கதைகளுமே இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.

அதிலும் மாடு அறுப்பு சம்பந்தமாக ஒரு விடயம் வரும்போது..இதனை முஸ்லிம்களுடன் முழுமையாக தொடர்புபடுத்தி பேசுவது அந்நிய மக்களிடம் இருக்கும் ஒரு வழமையான விடயமாகும்.

நாம் எப்போதும் மாட்டின் பயன்களையும், மாடு மட்டும்தான் உயிரா? என்றும் அந்நிய மதத்தில் சாப்பிட அனுமதி இருக்கிறதா ? இல்லையா என்றுமே வாதங்களை சமூகத்தில் வைக்கின்றோம்.

ஆனால் உண்மையில் பார்க்கும்போது இந்த மாட்டு இறைச்சி வியாபாரத்தில் முஸ்லிம்களுக்கு இவ்வளவு விமர்சனங்கள் இருக்கும்போது. இது கட்டாயம் செய்யவேண்டிய வியாபாரம் ஒன்றுதானா என்று நோக்கவேண்டும்

சில புள்ளிவிபரங்களை வைத்து நாம் இந்த வியாபாரத்தினை நோக்குவோம்.

இறைச்சிக்கடைகள் பொதுவாக "டெண்டர்" அடிப்படையிலே உரிமையாளர்கள் வருடா வருடம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்

ஒருவருட Tender ஒரு கடைக்கு குறைந்தது இருபது லட்சம் முதல் (2,000,000) கூடியது நாற்பது லட்சம் வரை போகக்கூடியது (இது கண்டி நகரை அடிப்படையாக்கொண்டது)...

இந்த தொகையை விட கூடிய தொகையினை செலுத்தும் கடைகள்கூட இலங்கையில் வேறு சில பாகங்களில் காணப்படுகிறது. சாதாரண கிராமப்புறங்களில் கூட குறைந்தது ஐந்து லட்சத்திற்கு வாங்கப்படுகிறது.

எப்படியிருப்பினும சராசரியாக இலங்கையில் ஒரு கடைக்கு ரூபா இருபது லட்ச வருட "டெண்டர்" பணம் ஒரு கடையினால் அரசிற்கு செலவளிக்கபடுகிறது.

இப்போது இந்த தொகையினை இலங்கையில் உள்ள கடைகளின் தொகையுடன் பெருக்கிப்பாருங்கள்.இப்பொது புரியும் இந்த வியாபாரத்தில் எவ்வளவு மில்லியன் அரசிற்கு செல்கிறது என்பதினை. blush

அடுத்து

ஒரு மாட்டின் விலை 15,000/= - 40,000/= வரை செல்கின்றது… நாட்டில் 95% மேலாக மாடு கொள்வனவு செய்வது அந்நிய சமூகத்திடம் இருந்துதான்.

ஒரு நாளைக்கு வெட்டப்படும் மாடுகளின் எண்ணிக்கையை சராசரி விலையுடன் பெருக்கி பார்த்தால் புரியும், ஒரு நாளைக்கு முஸ்லிம் கடைகளால் செலவழிக்கும் தொகையும் அதேவேலை அந்நிய மக்கள் சம்பாரிக்கும் தொகையும். surprise

மேலும்

காவல் துறையினருக்கு (சிறிய,பெரிய அதிகாரிகள்) கொடுக்கும் சந்தோஷம் (ஹராம் என்றாலும்) அண்ணளவாக ஆண்டுக்கு பல இலட்சம் ரூபாக்கள்.

சிலவேளைகளில் சட்டத்துக்குபுறம்பான விடயங்களால் அகப்பட்டு கரைத்து போன முஸ்லிம்களின் Lorry, Trucks போன்ற வாகனங்களின் பெறுமதிகள் அல்லது அதற்கான செலவுகள் வருடம் தோறும் பல இலட்சங்களை தாண்டும்.

இது தவிர இன்னும் ஏனைய பல செலவுகள்.

கூறவரும் விடயம் என்ன என்றால்...

வருடத்துக்கு அரச வருமானம் பல கோடிகள்.... மாடு விற்பதால் கிடைக்கும் வருமானம் அந்நிய சமூகத்தவர்களுக்கு

முஸ்லிம்களின் பணம் அநியாயத்துக்காக வீணாகிறது.AkuranaToday.com

எமது ஊரில்/சமூகத்தில்/இலங்கையில் இறைச்சி கடை செய்பவர்களோ அல்லது அதனை சார்த்து இருப்பவர்களோ நூற்றுக்கு 0.05% உம் இல்லை.

மேலே உள்ள மொத்த செலவுகளை ஒரு இறைச்சிக்கடை நபர் செய்யும்போது அவருக்கு 1Kg இறைச்சியை 450/= மேல் தான் விற்க வேண்டும்.

இதனால் இறைச்சி வாங்கும் மக்கள் ,அநியாயமாக அதிக விலை வாங்குகின்றார்கலோ என தோன்றுகிறது..

ஆகுமான இறைச்சி மனிதனுக்கு தேவைதான். விஞ்ஞான ரீதியாகவும் மனிதனுக்கு இறைச்சியின் பயன்கள் மிக அதிகம்.

ஆனால் முஸ்லிம் சமுதாயம் இவ்வளவு செலவுகள் ,கஷ்டங்கள் மத்தியில் செய்யும் வியாபாரத்தில், முஸ்லிம்களை விட அடுத்த சமுதாயமே (அரசும்) அதிகம் நன்மை அடைகிறது.அவர்கள் நன்மை அடையவது முஸ்லிம்களுக்கு பிரச்சினை அல்ல ..ஆனால் மாடு அறுப்பது சம்பந்தமான விடயம் ஒன்று பேசப்படும்போது முஸ்லிம்கள் மட்டுமே மாடு அறுப்பதுபோலும், முஸ்லிம்கள் மட்டுமே மாட்டு இறைய்ச்சி உண்பவர்கள் போலும் மற்றைய சமூகம் பேசுவது எவ்வித நியாயமும் இல்லை .angry

இறைச்சி கடை செய்பவர்களே...யோசியுங்கள்.... புதிதாக கடை எடுப்பதை தவிருங்கள்..

மக்களே.. இறைச்சி வாங்குவதை தவிருங்கள் / குறையுங்கள்.

நமது பணத்தை செலவழித்து.. நாம் ஏன் அவமானபட வேண்டும்.

* இக்கட்டுரை ஒரு தனி நபரையோ/நிறுவனத்தையோ தாக்கி எழுதப்பட்டது அல்ல.enlightened

இதில் குறை /நிரை இருப்பின் கீழே Comment பகுதியில் பதியவும்.

கட்டுரையை முழுமையாக வாசித்தபின், உங்களுக்கு இந்த விடயம் மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என நினைத்தால், கீழே உள்ள "SHARE"ஐ அழுத்துவதன் மூலம் Facebook/Twitter இல் பகிருங்கள்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி மிக சீக்கிரத்தில் பதியப்படும்

No comments:

Post a Comment