Monday, June 10, 2013

* சூடு பிடிக்கும் பசுவதை


சூடு பிடிக்கும் பசுவதை


இறைச்சிக் கடை விவகாரம் சூடு பிடிக்கிறது, உண்மையில் அகிம்சாவாதத்தை போதிக்கும் பௌத்த தர்மம் மாடுகளை மாத்திரமன்றி உயிரினங்கள் எதனையும் கொள்வதனை விரும்ப வில்லை, ஆனால் மாமிசம் உண்ணுவதை கண்டிப்பாக தடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, முயல்,மான் என எதனையும் மிருக வதையை எதிர்ப்பவர்கள் விரும்பமாட்டார்கள்.

பசுவதையை குறிப்பாக இந்து மதத்தினர் விரும்புவதில்லை ஏனெனில் பசுவிற்கு ஒரு புனிதமான இடத்தை வழங்கி உழவர் திருநாளில் சித்திரை புத்தாண்டில் அதற்கான விஷேடமான ஆசார தர்மங்களை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிறிஸ்தவர்களும் மாமிசங்களை உண்ணுகிறார்கள், சிங்கள பௌத்தர்களில் "கொள்வது தான் கூடாது " விற்பனைக்கு தயாராக இருந்தால் உற்கொள்ளலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் சிங்கள விவசாயிகள் பாலிற்காக மாத்திரமன்றி இறைச்சியிற்காகவும் ஆடு மாடுகளை வளர்க்கிறார்கள், அவர்களது பொருளாதாரம் அதில் தங்கியுமிருக்கிறது. பொதுவாக ஆடு அல்லது மாடு வயது சென்று இயற்கையாக இறந்து போவது மிக மிக அரிது.

உயிரினங்களை கொள்ளக் கூடாது என்பவர்கள் தர்க்க ரீதியாக பன்றியைக் கொள்தல், மீன்பிடிக் கைத்தொழில், இறைச்சி கோழி வளர்ப்பு என்பவற்றையும் எதிர்க்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை...

என்றாலும் இறைச்சிக்கடை நடாத்தும் நம்மவர் பல்வேறு இலக்குகளுக்காக மிருகவதை கோஷங்களுடன் வெளிக் கிளம்பும் சக்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்..!

அனுமதிப் பத்திரங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் நவீன சந்தைப் படுத்தல் முறைகளை கையாளல் வேண்டும், அடுத்தவர் மனதை பாதிக்கும் காட்சிப் படுத்தல் முறைகளை கைவிடல் வேண்டும்.

முஸ்லிம்களது இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக கசாப்புக் கடைகள் வந்து விடுமாயின் வாழ்விடங்கள் கள நிலவரங்களை கவனத்திற் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் கசாப்புக் கடைகளை தற்காலிகமாகவேனும் மூடி விடுவது குறித்து கலந்தாலோசனைகள் செய்து முடிவுகளுக்கு வரலாம்.

அடுத்த சமூகங்கள் தமது மத விழுமியங்களை முன்னிறுத்தி நாடு முழுவதுமுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடி விட முடிவெடுப்பின், முஸ்லிம்களும் இறைச்சிக் கடைகளை மூடி விட முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

என்றாலும் தற்பொழுது சூடு பிடித்து வரும் இறைச்சிக் கடை அரசியல் குறித்து முஸ்லிம் சமூகம் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment