Wednesday, June 12, 2013

* காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!


காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது?!!!!!

முஸ்லிம் சமூகத்தின் பெயர்சொல்லி சூட்சுமமாக கொள்ளையிடப்படும் 
அரபுநாட்டு பணம் ?!!!!
சூத்திரதாரி ஹிஸ்புல்லாஹ் பங்குதாரிகள் ராஜபக்ச சகோதரர்கள் !!!!!!
ஆக முன்னர் கூறியது போன்று உலமாக்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று உருவாக்கப்படவில்லை. ஆனால், ஆலிம்களும் தமது மேற்கல்வியைத் தொடர வழி யுண்டு என்பதே, இந்த வசதி தற்போதும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.

உலமா என்ற பெயரைப் பாவித்ததன் பயனாக பொது பல சேனைவை உசுப்பி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களும் ஏதோ கனவுலகில் இருந்திருப்பார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களைப் பெற்று மக்களை நல்வழியில் செல்ல உதவ வேண்டும்.

அதனால்தான் குர்ஆன், 49:6 – முஃமீன்களே! தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தி யைக்கொண்டு வந்தால், அப்பொழுது தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமை காரணமாக ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் தீங்கிழைத்துவிட நேரிடும். அப்பால் நீங்கள் செய்தவற்றின் மீது வருந்துவோராக ஆகிவிடுவீர்கள், என்கின்றது.
இதோ அந்த செய்தி

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 25 பல்கலைக்கழக கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அரசாஙகம் நடவடிக்கை எடுத்தள்ளது.

இதில் 20 பலக்லைக்கழக கல்லூரிகள் அரசாங்கமும், 5 பல்கலைக்கழக கல்லூரிகள் தனியாரும் ஆரம்பிக்கவுள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பவுண்டேசன் நிறுவனமும் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து மலிக் அப்துல்லா எனும் இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த பல்லைக்கழக கல்லூரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதியில் காத்தான்குடியிலுள்ள தொழிநுட்ப நிறுவனக்கட்டிடமொன்றில் தறகாலிக மாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நிரந்தரக் கட்டிடம் றெதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. 1500 மில்லியன் ரூபா செலவில் இதற்கான நிரந்தரக்கட்டிடம் மற்றும் விடுதிக்கட்டிடம் என்பன நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த கட்டிடம் 3 தொடக்கம் 4வருடங்களுக்குள் முடிக்கப்பட்டு அங்கு அது மாற்றப்படவுள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியில் இலங்கையிலுள்ள அறபு மதரசாக்களில் மௌலவி பட்டம் பெற்று கல்விப் பொதுத்தரதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த உலமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

தொழில் கல்வியும் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறியும் கற்றுக் கொடுக்கப்பட்டு டிப்ளோமா எனும் பட்டத்துடன் வெளியேறி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உலமாக்கள் தொழில் பெறக் கூடிய வகையில் இந்த பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது.
எங்கள் பார்வையில் பாரிய மோசடி ஒன்று அரங்கேற போகிறது !!
உங்கள் பார்வையில் கருத்துக்களை பதியுங்கள் !!!!

No comments:

Post a Comment