Thursday, June 6, 2013

* தேசிய ஷூறா சபை என்பது ஒரு பக்கச்சார்பு தலைமைத்துவ ஆசையின் வெளிப்பாடு மாத்திரமே!


தேசிய ஷூறா சபை என்பது ஒரு பக்கச்சார்பு தலைமைத்துவ ஆசையின் வெளிப்பாடு மாத்திரமே!


தேசிய ஷூறா சபை’ என்பது ஒரு பக்கச்சார்பு தலைமைத்துவ ஆசையின் வெளிப்பாடு மாத்திரமே!

1. இலங்கை நாட்டில் ’ஜம்மியத்துல் உலமா’ என்ற பெயரில் நாடுமுழுவதுமுள்ள உலமாக்களை உள்ளடக்கிய பழமைவாய்ந்த ஒரு அமைப்பு இருக்கும் போது ’தேசிய க்ஷூறா சபை’ என்ற ஒரு அமைப்பின் தேவை என்ன?

2. இந்த சிந்தனையை முன்வைப்பவர்கள் இதற்கு முன்னர் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சினையின் தீர்வுக்காக குரல்கொடுத்தவர்களா? குறைந்தது ஒரு ஆர்ப்பாட்டதிலாவது பங்குகொண்டுப்பார்களா?

3. இதற்கு பின்னர், இப்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வைப்பெற்றுத்தர குரல்கொடுத்து வருகின்றார்களா?

4. ஜம்மியத்துல் உலமா சபையில் உயர்பதவிகள் கிடைக்காத பல தலைகள் இந்த தேசிய க்ஷூறா சபை என்ற ஒரு சிந்தனையை முன்வைப்பதன் மூலம் தாங்கள் உயர்ந்த பதவிக்கு தயாராகின்றார்கள் என்று கருத்துக்கொள்வது தவறில்லை தானே?

5. முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்க ஆரம்பிக்கும் இந்த அமைப்பில் ஏன் தரீக்கா வாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டும்?

6. கடந்த காலங்களில் ஜம்மியத்துல் உலமா சபை சீய்யாக்களுக்கெதிராக குரல் கொடுத்த போது தேசிய க்ஷூறா சபை என்ற சிந்தனையை முன்மொழியும் சிலர் ஈரான் தூதுவரகத்துடன் இணைந்து பல சீய்ய சித்தாந்தவியல் நிகழ்வுகளில் போஸ்கொடுத்ததை எந்த கணக்கில் கொள்வது?

7. எந்த நோக்கத்திற்காக தேசிய க்ஷூறா சபை என்ற ஒன்றை அமைக்கப் போகிறீர்களோ அதே நோக்கத்தையும் எண்ணத்தையும் ஏன் ஜம்மியதுல் உலமா சபை மூலம் நிறைவேற்ற முடியாது?

8. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பள்ளிகட்டுதல், கிணறு கட்டுதல் மற்றும் வெளிநாட்டுப் பணத்தில் முட்டிபோடுகிறவர்கள் என்று விமர்சித்தவர்கள் அவர்களே அந்த பணியை தலையாய பணியாக செய்து வருவது போல,
ஜம்மியதுல் உலமா என்ற அமைப்பில் உயர்பதவிகளில் இல்லாதவர்கள் தேசிய க்ஷூறா சபை என்ற ஒன்றுக்கு தயாராகும் போது இந்த இரண்டிலும் இல்லாதவர்கள் நாளைக்கு மூன்றாவது ஒரு அமைப்பை தோற்றுவித்தால் எப்படியான பதிலை அவர்களுக்கு வழங்குவீர்கள்?

இந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் போது இன்னும் சில முக்கியமான பிரச்சினைகளை வைக்கத்தயாராக இருக்கின்றேன்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

நான் பார்க்கும் உலகம்

No comments:

Post a Comment