Wednesday, June 12, 2013

* ரிசானா நபீக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகமும் ?!!!!!!!!!

ரிசானா நபீக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகமும் ?!!!!!!!!!


எங்கள் அன்பு சகோதரி ரிசானாவை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள் அவருக்கும் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகத்துக்கும் என்ன தொடர்பு மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக
நினைக்கிறீர்களா ,?!!!!!!!
இல்லை முஸ்லிம் சமூகமே ரிசானா நபீக்கின் இரத்தத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கை இந்த உலமாக்களின் 
பல்கலைக்கழகம் !!எப்படி என்று கேட்கிறீர்களா ?
சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் இவர்யார்
என்று தெரிகிறதா ?!!இவர் ரிசானாவின் துயரில் பங்குகொள்ள வந்தவர் !!!!
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.இந்த நிதி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து சவூதி பிரஜையினால் கையளிக்கப்பட்டது.!!!!ஹிஸ்புல்லாவின் வலையில் மாட்டிய திமிங்கிலம் !!!!
இவர் ரிசானாவின் வீட்டு முற்றத்தையும் மிதிக்க அனுமதுக்கப்படவில்லை சிதிலமடைந்த பள்ளிவாசல்களுக்கு
அழைத்துசெல்லப்பட்டார் அடிக்கல் நாட்டினார் !!!
அதேநேரம் மஹிந்த சிந்தனை தீவிரமாக வேலைசெய்ய இராணுவம் வீடுகட்டியது ?!!
பிச்சைக்காரர்களை விடகேவலமாக ஏழை முஸ்லிம்களின்
துயரம் ஹிஸ்புல்லாவினால் ஒப்பாரிப்பாட உலமாக்களை காட்டி வியாபாரம் பேசப்பட்டது !!
இதனால் ரிசானாக்கள் இலாபம் அடையப்போவதில்லை என்பது இந்தமூதேவிக்கு தெரியும் !
1500 மில்லியன் ரூபா திட்டத்தில் கமிஷன் அடிப்பதற்கு இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம் சமூகத்தை விலைபேசி
ரிசானாவின் இரத்தத்தில் உடன்படிக்கை போட்டதை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது நான் பார்க்கும் உலகத்தின் கடமை !!சொல்லுவது எங்கள் கடமை தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு !!

No comments:

Post a Comment