Friday, January 2, 2015

* நாம் முஸ்லிம்கள் ஏன் மஹிந்தவிற்கு வாக்களிக்க கூடாது !




நாம் முஸ்லிம்கள் ஏன் மஹிந்தவிற்கு வாக்களிக்க கூடாது
என்பதற்கு ஆதாரங்களுடன் ஒருசில
தகவல்களை உங்களுக்கு தருகின்றேன்.
இன்னும்
என்னிடம் ஏராளமாக தகவல்கள் இருக்கின்றன.
கீழ்வரும் சம்பவங்களை நடாத்திய ஒரு நாயையேனும் இந்த அரசாங்கம் கைது செய்யவில்லை.
திகதி இடம் சம்பவம்
1) 09.01.2013 அநுராதபுரம்
மல்வத்து ஓயா பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
2) 26.01.2013 இரத்தினபுரி 150 பௌத்த
தேரர்களைக் கொண்ட
குழு ஜெய்லானி பள்ளிவாயலைத் தாக்குவதற்கான முயற்சி.
3) 09.02.2013 மாத்தறை கந்தர பள்ளிவாயல் தாக்குதல்.
4) 10.02.2013 குருநாகல் நூரம்மல
பள்ளிவாயலுக்கு சுபஹ_ தொழுகைக்காக சென்றவர்
தாக்கப்பட்டார்.
5) 22.02.2013 காலி ஹிரும்புற முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
6) 28.02.2013 கேகாலை கேகாலை ஜூம்ஆ
பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
7) 03.03.2013 இரத்தினபுரி ஓபநாயக்க பள்ளிவாயல்
தாக்குதல்.
8) 03.03.2013 கம்பஹா மஹர பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
9) 05.03.2013 கம்பஹா மஹர
பள்ளிவாயலை மூடுமாறு அமைச்சர் உத்தரவு.
10) 28.03.2013 கொழும்பு பெபிலியான
பிரதேசத்தில் அமைந்துள்ள பெசன் பக் நிறுவனம் தாக்கப்பட்டது.
11) 16.04.2013 கண்டி கம்பளை நகரில் முஸ்லிம்
சகோதரருக்கு சொந்தமான லக்கி எம்போரியம்
தாக்கப்பட்டது.
12) 01.07.2013 மட்டக்களப்பு நூவலடி மஸ்ஜிதுன்
நூர் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
13) 17.07.2013 கொழும்பு கிரான்பாஸ் பள்ளிவாயல்
தாக்கப்பட்டது.
14) 15.09.2013 திருகோணமலை புல்மோட்டைப்
பிரதேசத்தில் முஸ்லீம்களுக்கு சொந்தமான 1500
மேற்பட்ட ஏக்கர் காணிகளை பௌத்த கோவில்
அமைப்பதற்காக கையகப்படுத்தியமை.
15) 08.11.2013 மாத்தறை இஸ்ஸதீன் மாவத்தையில்
அமைந்துள்ள மஸ்ஜிது தக்வா பள்ளிவாயலின்
பதிவினை புத்தசாசன அமைச்சு இல்லாமல் செய்தது.
16) 17.11.2013 அநுராதபுரம் கெக்கிராவ யு 9
வீதியில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாயல்
காடையர்களால் தாக்கப்பட்டது.
17) 01.12.2013 மொறட்டுவ பல்கலைக் கழகம்
முஸ்லிம் மாணவிகள் நிகாப்
அணிந்து வருவதை தடைசெய்தது.
18) 12.12.2013 தெகிவளை பொலிஸ் நிலையம்
தாருஸ் ஸாபி பள்ளிவாயில்
தொழுகை நடாத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
19) 15.12.2013 தேகிவளை அத்திடிய மாவத்தையில்
அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிபா பள்ளிவாயலில்
தொழுமை நடாத்துவதை நிறுத்துமாறு தெகிவளைப்
பொலிஸ் நிலையத்தினால் கோரப்பட்டது.
20) 31.12.2013 அம்பதென்ன குண்டி அம்பதென்ன
மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்கு தாக்குதல்.
21) 04.01.2014
தம்புள்ளை தும்புள்ளை பள்ளிவாயலைச்
சுற்றி வாழ்ந்த சுமார் 107 குடும்பங்கள்
வெளியேற்றப்பட்டனர்.
22) 05.01.2014 போதைப்
பொருட்களை கடத்துவதற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா பயன்படுத்தப்படுகிறது என
BBS பகிரங்கமாக அறிக்கையிட்டது.
23) 07.01.2014 முற்று முழுதாக ஹலால்
முறையினை ஒழிக்க வேண்டுமென பத்திரிகையாளர்
மாநாடு நடாத்தப்பட்டது.
24) 19.01.2014 மாவத்தகம பள்ளிவாயலுக்கு முன்னால் காணப்பட்ட அமைதி என்ற பலகை தீக்கிரையாக்கப்
பட்டது.
25) 13.02.2014 கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் அமைந்திருந்த
தொழுகை அறை அடாத்தாக மூடப்பட்டது.
26) 19.02.2014 கண்டி கண்டி டி.எஸ். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள ஜின்னா பள்ளிவாயல்
குண்டர்களால் தாக்கப்பட்டது.
27) 22.03.2014 கேகாலை மாவனல்ல நகரில் ஹஸன்
மாவத்தை எனக் காணப்பட்ட பெயர்பலகையை அநகாரிக
தர்மபால மாவத்தை என பலவந்தமாக மாற்றியமை.
28) 26.03.2014 தம்புள்ள தம்புள்ள நகர பள்ளிவாயலுக்கு இரண்டு கைக் குண்டுகள் வீசப்பட்டன.
29) 08.04.2014 மன்னார் முஸ்லீம்களின் மீள்
குடியேற்றத்தை அச்சுறுத்தும் வகையில் BBS
வில்பத்து சரனாலயத்திற்கு சென்று முஸ்லீம்களை அச்சுறுத்தியமை.
30) 23.04.2014 BBS அமைப்பு றிசாட் பதியுதீன் அவர்களின் அமைச்சுக்குள் சென்று அட்டகாசம்.
31) 09.05.2014 அளுத்கம நகரில் அமைந்துள்ள
கடைகளுக்கு தீ வைப்பு.
32) 28.05.2014 மாவனல்ல மஸ்ஜித் தாருள்
ஹிக்மாவை மூடுமாறு இரண்டு பௌத்த தேரர்கள்
உத்தரவு.
33) 21.06.2014 பாணந்துறை நோலிமிட் வர்த்தக
நிலையம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
34) நோன்பு காலத்தில் கிறீஸ் ஜக்காவினை முஸ்லிம் ஊர்களில் உலாவவிட்டு பெண்களை பயமுறுத்தி, கிறீஸ் ஜக்காவினை இரானுவ முகாம்களில் மறைத்து வைக்கப்பட்டமை.
முடிந்தளவு நன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உண்மையை உலகறியச் செய்யுங்கள்


No comments:

Post a Comment